tamilnadu

img

ஐ.ஐ.டிகள், மத்தியப் பல்கலை.யில் 1400-க்கும் மேல் எஸ்.சி.,எஸ்.டி., ஓபிசி பேராசிரியர் காலியிடங்கள்

புதுதில்லி,டிச.21- ஐ.ஐ.டி, மத்திய பல்கலைக்கழகங் களில்  எஸ்.சி.,எஸ்.டி., ஓபிசி பேராசிரி யர் பணியிடங்களில் நிரப்பப்படாத நிலுவைக் காலி இடங்கள் 1400க்கும் மேல் உள்ளன என்று சு.வெங்கடேசன் எம்.பி.யின் கேள்விக்கு ஒன்றிய அமை ச்சர் அதிர்ச்சியான பதில்அளித்துள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: ஐ.ஐ.டிகள் மற்றும் மத்தியப்  பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள்   காலியிடங்களை நிரப்புவதற்கு ஓராண்டு  காலக்கெடுவோடு 2021 செப்டம்பர் 5 அன்று பணி நியமனத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. எல்லா இட ஒதுக்கீடு நிலுவை காலியிடங்களையும் நிரப்பப் போவதாகவும் சொல்லப்பட்டது. 2022 செப்டம்பர் 4 அன்று ஓராண்டுக் கெடு முடிந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இது குறித்த கேள்வி ஒன்றை எழுப்பி யிருந்தேன். 

நாடாளுமன்றத்தில் கேள்வி

021 செப்டம்பர் 5 அன்று இருந்த பேரா சிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர்  இட ஒதுக்கீடு காலி யிடங்கள் எவ்வளவு, எவ்வளவு இடங்கள் நிரப்பப்பட்டன, ஓராண்டு கெடு முடிந்த 2022 செப்டம்பர் 4 அன்று எவ்வளவு இட ஒதுக்கீடு காலியிடங்கள் இருக்கின்றன, இந்த நிறுவனங்கள் வெளியிட்ட பணி நியமன அறிவிக்கைகளில் நிலுவை இட ஒதுக்கீடு இடங்களின் எண்ணிக்கை தரப்பட்டனவா என்று கேள்விகளை எழுப்பி இருந்தேன். (கேள்வி எண் 1848/ 19.12.2022).  அதற்கு பதில் அளித்த ஒன்றிய கல்வி  இணை அமைச்சர் அன்ன பூர்ணா தேவி, 23 ஐ.ஐ.டி கள், 45 மத்திய பல்கலைக்கழகங்கள் குறித்த விவரங்களை தந்துள்ளார்.  

ஐ.ஐ.டிகளில் அப்பட்ட மீறல் இதில் கரக்பூர், வாரணாசி, கவுகாத்தி, ஹைதராபாத், ஜோத்பூர், ரோபார், பாலக்காடு, ஜம்மு  ஆகிய 8 ஐ.ஐ.டிகள்  “நெகிழ்வு பதவி அமைப்பை” (Flexible Cadre Structure) கொண்டிருப்பதால் அவற்றில் இட ஒதுக்கீடு இடங்களை அடையாளம் காண இயலவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. பாட்னா  ஐ.ஐ.டியில் ரோஸ்டர் 2021 இல் பராமரிக்கப்படவில்லை என்று குறிப் பிடப்பட்டுள்ளது. மற்ற 14 ஐ.ஐ.டிகளில் கடந்த 05.09.2021 அன்று   மொத்த நிலுவை காலியிடங்கள் 342. அவற்றில்  ஓ.பி.சி 156, எஸ்.சி 98, எஸ்.டி 50 என இருந்துள்ளன. பிரிவு வாரி தகவல்கள் இல்லாதவை 38 காலியிடங்கள் ஆகும்.  ஓராண்டு கழித்து  04.09.2022 அன்று மொத்த நிலுவை காலியிடங்கள் 358 இருக்கின்றன. அவற்றில் ஓ.பி.சி 185, எஸ்.சி 113, எஸ்.டி 60 காலியிடங்கள் நிலுவையாக உள்ளன.  இதுதவிர நடப்பு ஆண்டு 151 காலியிடங்களில் 82 ஓ.பி.சி, 46 எஸ்.சி, 23 எஸ்.டி இடங்கள் நிரம்பவில்லை.  சென்னை ஐ.ஐ.டியில் 2021 இல் மொத்த நிலுவை காலியிடங்கள் 44. பணி நியமனங்களுக்கு பிறகு நிரம்பாத நிலுவை காலியிடங்கள் 16  ஆகும்.  கரக்பூர், ரூர்கி, தான்பாத், திருப்பதி, கோவா, தார்வார் ஆகிய ஐ.ஐ.டி களில் ஒரு எஸ்.டி தேர்வர் கூட நியமனம் பெற வில்லை. ஐ.ஐ.டி ரூர்கியில் ஒரு எஸ்.சி தேர்வர் கூட நியமனம் பெறவில்லை. பெரும்பாலான ஐ.ஐ.டி கள் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பதவிகளுக்கு எஸ்.சி, எஸ்.டி, ஓ. பி. சி தேர்வர்களுக்கு நியமனம் தரவில்லை. உதவி பேராசிரியர் பணியிடங்களில் மட்டுமே நியமனம் தந்துள்ளனர். 

மீறல் போட்டியில் மத்திய பல்கலைக்கழகங்களும்

அமைச்சர் 45 மத்திய பல்கலைக் கழகங்களின் விவரங்களையும் தந்துள்ளார். அவற்றில் 12 மத்திய பல் கலைக்கழகங்கள் இட ஒதுக்கீடு காலி யிடங்கள் ‘ 0’ என காண்பித்துள்ளன. இட  ஒதுக்கீடு காலியிடங்கள் அடையாளம் காணப்படவில்லையா, நிலுவை இடங்களே இல்லையா என்பது ஐ.ஐ.டி விவரங்களில் தரப்பட்டது போல இதில் சொல்லப்படவில்லை.  மற்ற 33 மத்தியப் பல்கலைக் கழ கங்களில் கடந்த 2021 செப்டம்பர் 5 இல் மொத்த நிலுவை காலியிடங்கள் 1099.   அவற்றில் ஓ.பி.சி 408, எஸ்.சி 424, எஸ்.டி 267 என இருந்துள்ளன. ஓராண்டு  கெடு வைத்து பணி நியமனங்கள் நடந்து முடிந்த பின்னர் 2022 செப்டம்பர் 4  இல் மொத்த நிலுவை காலியிடங்கள் 919. அவற்றில் ஓ.பி.சி 340, எஸ்.சி 341, எஸ்.டி 238 என இருந்துள்ளன. இந்த ஓராண்டில் நிரப்பப்பட்டுள்ள நிலுவை காலியிடங்கள் 212 மட்டுமே. அவற்றில் ஓ.பி.சி 84, எஸ்.சி 94, எஸ்.டி 34  இடங்கள் ஆகும். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் 05.09.2021 அன்று இருந்த மொத்த நிலுவை காலியிடங்கள் 24. அவற்றில் ஓ.பி.சி 9, எஸ்.சி 8, எஸ்.டி 7 என இருந்து ள்ளன. ஓராண்டில் நிரப்பப்பட்டுள்ள நிலுவை காலியிடங்கள் 6 மட்டுமே (ஓ.பி.சி 3, எஸ்.சி 1, எஸ்.டி 2).  பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் 05.09.2021 அன்று இருந்த மொத்த நிலுவை காலியிடங்கள் 49. அவற்றில் ஓ.பி.சி 11,  எஸ்.சி 21,  எஸ்.டி 17 என இருந்துள்ளன. ஓராண்டில் நிரப்பப்பட்டுள்ள நிலுவை காலியிடங் கள் 23 மட்டுமே (ஓ.பி.சி 8, எஸ்.சி 9, எஸ்.டி 6). 

கெடு கெடுவதற்கா?

அமைச்சரின் பதில் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஐ.ஐ.டி களில் “இலக்கு இடப்பட்ட பணி நியமனங்கள்” துவங்கிய போது இருந்த இட ஒதுக்கீடு காலி இடங்களை விட ஓராண்டு கெடு முடிந்த பின்னர் நிலுவை காலியிடங்கள் அதி கரித்துள்ளன. பல மத்தியப் பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படுவதற்கான முனைப்பு இருந்ததாகவே தெரியவில்லை. கெடு கெடுவதற்கா என்ற கேள்வி எழுகிறது.  ஐ.ஐ.டி.களில் 342 இட ஒதுக்கீடு காலியிடங்கள் ஓராண்டில் நடப்பு இடங் களையும் சேர்த்து 509 இட ஒதுக்கீடு காலியிடங்களாக அதிகரித்துள்ளது.  8 ஐ.ஐ.டி கள் அதாவது 30 சதவீதத் திற்கும் அதிகமான ஐ.ஐ.டி கள் “நெகிழ்வு பதவி அமைப்பை” வைத்துள்ளோம் என்று சொல்லி இட ஒதுக்கீடு எண்ணிக் கையை தரவில்லை. பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரி யர் என எல்லாப் பதவிகளுக்கும் தனித் தனியாக இட ஒதுக்கீடு உறுதி செய்யப் படவில்லை என்பது தெளிவாகிறது.  இப்படி சில ஐ.ஐ.டி கள் தனி முறைமை யை வைத்திருப்பது இட ஒதுக்கீடு கோட்பாடுகளை மீறுவது ஆகும். இதில்  அதை வெளிப்படுத்தாத மற்ற ஐ.ஐ.டிகளி லும் இந்த நடைமுறை இருக்கிறது என்றே நினைக்கிறேன். எல்லா நேரடி  நியமனங்களிலும் இட ஒதுக்கீடு ரோஸ்டர் தனித் தனியாக கடைப்பிடிக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட  வேண்டும். உரிய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும். 

ஐ.ஐ.டி பாட்னாவில் இட ஒதுக்கீடு ரோஸ்டரே கடந்த ஆண்டு இல்லை என்று  பதிலில் உள்ளது. இது சட்டத்தை மீறுவது ஆகும். இதற்கு பொறுப்பானவர்கள் மீது   நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஐ.ஐ.டி கள் இட ஒதுக்கீடு எண்ணிக்கையை தர  முடியவில்லை என்றால் பணி நியமன  அறிவிக்கையிலும் காண்பிக்கவில்லை என்று பொருள். நான்கு, ஐந்து ஐ.ஐ.டி  கள் மட்டுமே பணி நியமன அறிவிக்கை யில் இட ஒதுக்கீடு விவரங்களை தந்திருந்ததாக அறிகிறேன்.  இப்படி இட  ஒதுக்கீட்டு விவரங்களை வெளியிடாமல் இருப்பது, விதிகளை மீறுகிறசெயல்.  இட ஒதுக்கீட்டு பிரிவினர் விண்ணப்பம் செய்வதற்கான தகவல்களை மறைப்ப தும் ஆகும். வெளிப்படைத்தன்மை அற்ற அணுகுமுறை மாற்றப்பட வேண்டும். அறிவிக்கைகளில் நிலு வைக் காலியிடங்கள் காண்பிக்கப்படுவ தோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இணைய தளங்களிலும் வெளியிடப்பட வேண்டும். இதுகுறித்து ஏற்கெனவே நான் 15.12.2021 அன்று கல்வி  அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அப்போதே அமைச்சகம் தலையிட்டு இருந்தால் இட ஒதுக்கீடு அமலாக்கத்தில் இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டு இருக்காது. உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.   மத்திய பல்கலைக் கழகங்களிலும் பெரும் அநீதி நிகழ்ந்துள்ளது. 05.09.2021 இல் மொத்த நிலுவை காலி யிடங்கள் 1099 (ஓ.பி.சி 408, எஸ்.சி 424, எஸ்.டி 267). இவற்றில் ஓராண்டில் நிரப்பப்பட்டவை 212 மட்டுமே. (ஓ.பி.சி 84,  எஸ்.சி 94, எஸ்.டி 34). 20 சதவீத நிலுவை காலியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை. 

விசாரணை தேவை

எனது கருத்து என்னவெனில், சாண் ஏறினால் முழம் சறுக்குவது போல  ஒன்றிய அரசு உயர்கல்வி நிறுவனங் களில் இடஒதுக்கீடு அமலாக்கம் உள் ளது. ஓராண்டு காலக்கெடு முடிந்த பிறகு  அதே நிலைமை, அதைவிட மோசம் என்றால் மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் இட ஒதுக்கீடு சட்டம்) மீறப்படு கிறது என்பது அப்பட்டமாக வெளிப்படு கிறது.  இடஒதுக்கீட்டு மீறல்கள் பற்றி நாடா ளுமன்றத்தில் எழுப்பினாலும், அமைச்சர் களுக்கு  கடிதம் எழுதினாலும் உயர்கல்வி  நிறுவனங்கள் தன்னாட்சி பெற்றவை என்று பதில் தரப்படுகிறது. இப்படி அரசு கை கழுவ முடியாது. அந்த  நிறுவனங் களின் தன்னாட்சி என்பது அரசியல் சாச னத்திற்கும் விஞ்சிய தன்னாட்சி அல்ல.  முனைவர் பட்ட அனுமதிகளில் சாதிய பாரபட்சங்கள் இருப்பதும் பேராசிரியர் பதவிகளுக்கு வர முடியாமல் செய்கிற நோக்கம் கொண்ட செயலே ஆகும். அரசு அதிலும் கவனம் செலுத்த வேண்டும். 

இவ்வளவு காலியிடங்கள் நிரப்பப்பட வில்லை என்றால் எத்தனை விண்ணப்ப ங்கள் வந்தன? ஏன் அவர்கள் தெரிவு செய்யப்படவில்லை? என்பது வெளிப் படையாக அறிவிக்கப்பட வேண்டும். சில  நிறுவனங்களில் “போதுமான விண்ணப் பங்கள் வரவில்லை” என்றும் “யாரும் தகுதி பெறவில்லை” என்றும் காரணங் கள் காண்பிக்கப்படுகிறது. யார்  இதை கண்காணிப்பது? சாதிய பாரபட்சம் இருப்பின் எப்படி அதை சரிசெய்வது? இது குறித்த விசாரணை ஒன்றை சமூக நீதியின் பால் அக்கறை கொண்ட கல்வி யாளர்களை கொண்டு நடத்தவேண்டும்.  இப்போதாவது புதிய ரோஸ்டர்கள் எல்லா ஐ.ஐ.டி, மத்தியப் பல்கலைக் கழக ங்களில் தயாரிக்கப்பட்டு காலியிடங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும். புதிய நிய மன அறிவிக்கைகள் வெளியிடப்பட வேண்டும். இட ஒதுக்கீடு மீறல்களை தடுக்க விரிவான வழிகாட்டல்களை கல்வி அமைச்சகம் வழங்க வேண்டும். சமூக நீதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்.  இது குறித்து கல்வி, சமூக நீதி அமைச்சர்களுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதவுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.