tamilnadu

img

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மிதமான மழை

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மிதமான மழை

தூத்துக்குடி, அக்.21- வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. திங்கட்கிழமை  நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 84.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மற்றும் மாநகர பகுதிகளில்  திங்கட்கிழமை காலை முதல்  வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அதிகபட்சமாக சூரங்குடியில் 15 மில்லி மீட்டர் மழையும் கழுகுமலை, கயத்தார், கடம்பூரில்  9 மில்லி மீட்டர் மழையும் எட்டையபுரத்தில் 8.70 மில்லி மீட்டர் மழையும் வைப்பாரில்  7  மில்லிமீட்டர் மழையும் விளாத்திகுளத்தில் 6 மில்லி மீட்டர் மழையும் தூத்துக்குடியில் 3 மில்லி மீட்டர் மழையும் கோவில்பட்டியில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதும் 84.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும்  மாவட்ட நிர்வாகம் சார்பில்மழைப்பொழிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு தூத்துக்குடி ஆதிபராசக்தி நகர் முழுவதும் தேங்கியுள்ள மழை நீர், அருகாமையில் உள்ள மழை நீர் ஓடை வழியாக பொங்கி நிரம்பி வழிகிறது ஆதிபராசக்தி நகர், மழை நீரில் வித்தியாசமான சிகப்பு நிற பூச்சிகள் ரத்த கரை போல் காட்சியளிக்கும் நிலை உள்ளது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திங்கட்கிழமை காலை முதலே மிதமான சாரல் மழை பெய்து  கொண்டிருக்கிறது.  ஆதிபராசக்தி நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லை என கூறும் இப்பகுதி மக்கள் வெளிப்பகுதியில் இருந்து மழை நீர் ஓடை வழியாக தண்ணீர் பொங்கி வருவதால் தங்கள் பகுதியில் தண்ணீர் மட்டம் குறையாமல் அதே நிலைமையில் நீடிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். அது மட்டுமல்லாமல்   தேங்கியுள்ள மழை நீரில் சிகப்பு நிறத்தில் ரத்த கரை போல் பூச்சிகள் நடமாடுவதால் இந்த தண்ணீரில் நடக்கும் பொதுமக்களின் கால்களில் ஊறல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். எனவே உடனடியாக மாநகராட்சி சார்பில் இந்த மழை நீரை அப்புறப்படுத்த கனரக மின்மோட்டார்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மேயர் ஜெகன் அப்பகுதிக்கு வந்து  ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்றினார். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நள்ளிரவு முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. மாநகராட்சியில் சில  குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு மழை நீரை அகற்ற தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் குளங்கள் கண்மாய்களில் நீர் அதிகரித்துள்ள நிலையில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தூத்துக்குடி மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.              தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,  மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சீனா வானா குளம், மாடன் குளம், சங்கர பேரி குளம், பண்டாரம் பட்டி குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  மழை நீர் அதிகரித்து உடைப்பு ஏற்படாதுவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.