சென்னை, மே 16- தமிழகத்தில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்த மாநில அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் உயர் கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என் றும் முதலமைச்சர் மு,.க.ஸ்டாலின் கூறினார். சென்னை பல்கலைக்கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழா திங்களன்று (மே 16) பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற் றது. இதில் பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, துணை வேந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். முன் னாள் உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், முதல்வரின் செயலாளர் சண்முகம், சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முனைவர் பட்டம் பெற்றனர். மேலும் பல முக் கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆளு நர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதி பர்கள் என சிறப்பு வாய்ந்தவர்களை இந்த பல்க லைக்கழகம் உருவாக்கி உள்ளது. தமிழக மாண வர்கள் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை” என்றார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “வேலை கள் இருக்கின்றன, திறன் குறைவாக இருக்கி றது; இதனை சரி செய்யவே ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக் குறை இருந்தாலும் மாணவர்களுக்கான திட் டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. மாண வர்கள் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகை யில் பல்கலைக்கழகங்கள் திட்டங்களை செயல் படுத்த வேண்டும்” என்றும் கூறினார். குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தரும் உண்மையான சொத்து கல்வி மட்டுமே. வேலை கிடைக்கவில்லை என எந்த இளைஞனும் கூறக் கூடாது என்ற வகையில் அரசு செயல்படுகிறது. எனது ஆட்சிக்காலம் கல்வியின் பொற்கால மாக மாறவேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு: அமைச்சர்
உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன் முடி பேசுகையில், “நீட் தேர்வு மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்தி ருக்கிறேன்” என்றார். 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்ப டையில் மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்பு களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர் களுக்கு பயனளிக்காது. தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உதவுகின்றன என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன்: ஆளுநர்
பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளு நருமான ஆர்.என். ரவி, “தமிழ் மொழி இலக்க ணமும், இலக்கியமும் கொண்ட பாரம்பரியமிக் கது. பழமை வாய்ந்தது. உலகின் தொன்மை யான மொழி தமிழ் என பிரதமர் மோடி கூறி யுள்ளார். பிரதமர் குறிப்பிட்டது போன்று தமிழ் மிகவும் பழமையான மொழி தான். முதல்வர் பேரவையில் அறிவித்தபடி 4500 ஆண்டு களுக்கு முன்பே தமிழர்கள் இரும்பின் பயன் பாட்டை அறிந்து இருந்தனர். தமிழர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன் இரும்பை உருக்கிப் பயன்படுத்தி உள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகளும் உறுதிப்படுத்தி இருப்பது பெருமை” என்றார். கல்வி, தொழில், மருத்துவம் ஆகிய துறை களில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன் னோடியாக உள்ளது. பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக் காடு மொழியாகக் கொண்டு வர வேண்டும். தமிழை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்க ளில் தமிழ் மொழி இருக்கைகளை அமைக்க தமி ழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.