tamilnadu

சிறுபான்மையினர் நலத்திட்டங்கள்: ஜுன் 19-ஆலோசனை, கருத்து கேட்பு கூட்டம்

சிறுபான்மையினர் நலத்திட்டங்கள்:  ஜுன் 19-ஆலோசனை, கருத்து கேட்பு கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜுன் 13-  தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண், சே.ச. சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளை ஜுன் 19 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் கருத்துகளை கேட்டறியவும் உள்ளனர். அவ்வமயம் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரைச் சந்தித்து, தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.