சென்னை,ஜன.27- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநில பொதுச் செயலா ளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் மதவெறி செயல் களில் ஈடுபட்டு மக்கள் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் சக்திகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. தமிழகத்தில் கடந்த காலங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடை பெற்று வந்த இந்துத்துவா சக்திகளின் மதவெறி செயல்கள் அதிகரித்து, தொடர் நடவடிக்கைகளாக நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. சமீபத்தில் கோவை ராமநாதபுரத் தில் தேவாலயம் தாக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து சிலை சிதைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அராஜகம் புரிந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் காவல்துறை பாதுகாப்பி லிருந்த சாலையோர வியாபாரியை தாக்கியுள்ளனர். கோயம்புத்தூரில் சாலையில் கூட்டம் சேர்த்த கும்ப லை விசாரிக்க சென்ற காவல்துறை கண் காணிப்பாளரையே தாக்கியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் தங்கி பிளஸ்-2 படித்த விடுதி மாணவி தற்கொலைக்கு மத மாற்ற நோக்கம் கற்பித்து கலவரம் நடத்தும் விதத்தில் செயல்பட்டு வருகிறது இந்துத்துவா சக்திகள். இதுபோன்ற கொடுஞ்செயல்களை முன்னின்று நடத்துபவர்கள், ஆர்.எஸ்.எஸ், பாஜக இந்து முன்னணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளாக இருப் பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள் ளது.
இதே அமைப்பின் தலைமை கள் தான் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறும் பாலியல் வன்கொடு மைக்கு ஆதரவாக இருப்பதும், சென்னை, கோவை பள்ளி மாணவி கள் பாலியல் சீண்டலுக்கு துணை போனதையும் நாடறியும். தமிழ்நாட்டை கலவர பூமியாக்கி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் இந்துத்துவா சக்திகள் மீது தயவு தாட்சண்யமற்ற முறையில் நட வடிக்கை எடுக்க வேண்டும். இந்துத்துவா சக்திகளின் கல வரத்தை தூண்டும் இது போன்ற செயல்களுக்கு எதிராக தமிழக மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.