சென்னை, மார்ச் 22- தமிழ்நாடு சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பிய கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார். அப்போது,”ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது”என்றார். ஆன்லைன் சூதாட்டத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த பலரும் பொருளா தாரத்தை இழக்கிறார்கள். இதைத் தடுப்பத ற்காக கடந்த அதிமுக ஆட்சியின்போது அவசர கோலத்தில் சட்டம் கொண்டு வந்ததால் நீதிமன்றத்தால் அந்தச் சட்டம் தடை செய்யப்பட்டது. ஆனாலும் புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி கொள்ளலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவு றுத்தியுள்ளது. இது குறித்து சட்ட வல்லு னர்களுடன் அரசு ஆலோசனை செய்தது. அப்போது ஏற்கனவே இருக்கும் சட்டத் தையே வலுவுள்ளதாக மாற்றலாம் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்ப டையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சுயமாக பழைய சட்டமே நிலைநிறுத்தி ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை தரும் என்று நம்பிக்கை இருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.