சென்னை, செப். 20 - கவிஞர் தமிழ்ஒளி நினைவாக ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெறும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் படைப்புலகம் குறித்த கருத்தரங்கம் புதனன்று (செப்.20) சென்னை யில் தொடங்கியது. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையும், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழுவும் இணைந்து இந்த இரு நாள் நிகழ்வை நடத்து கின்றன. முனைவர் இ.சுந்தரமூர்த்தி, சிகரம் ச.செந்தில்நாதன் தொகுத்த, ‘கவிஞர் தமிழ் ஒளி படைப்புலகம் - கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள்’ எனும் நூலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட, முனைவர் இ.சுந்தரமூர்த்தி. பேரா.பர்வீன் சுல்தானா, புலவர் பா.வீரமணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புலகம் குறித்து உரையாற்றிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டை முன்னிட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மார்பளவு சிலை அமைக்கப்படும். மேலும் 50 லட்சம் ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையை செலுத்தி, அதில் கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டு தோறும் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம் நடத்த அறி வுறுத்தி உள்ளேன்” என்றார். இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி பேசிய விழாக்குழு தலைவர் சிகரம் ச.செந்தில் நாதன், “1948களில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு இருந்தது. அந்த காலக்கட்டத் தில் தமிழ் ஒளியை 10 மாதங்கள் வைத்து பராமரித்தவர் தி.க.சி. தமிழ் ஒளிக்கு நூற்றாண்டு விழாக் குழு அமைத்து செய லாற்றி வருபவர்களும் மார்க்சிஸ்ட்டு கள்தான்” என்பதை சுட்டிக்காட்டினார். பேரா.இ.சா.பர்வீன் சுல்தானா, “பாரதி அளவிற்கு பாரதிதாசனும், பாரதிதாசன் அள விற்கு தமிழ் ஒளியும், கண்ணதாசன் அள விற்கு பட்டுக்கோட்டையும் கொண்டாடப் படவில்லை. தமிழில் சிறந்த 10 கவிஞர்களை பட்டியலிட்டால் அதில் முதலிடம் பாரதி தாசனுக்கு தான். அத்தகைய பாரதிதாச னால் கண்டெடுக்கப்பட்டவர் தமிழ்ஒளி. பிறப்பின் காரணமாக அவர் கொண்டாடப் படவில்லை. அவரின் படைப்புகளை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில் சென்னைப் பல்கலைக் கழக பதிவாளர் ச.ஏழுமலை, தமிழ் இலக்கியத்துறை தலைவர், ஆ.ஏகாம்பரம், கவிஞர் ஈரோடு தமிழன்பன், பேராசிரியர்கள் வீ.அரசு, ய.மணிகண்டன், கோ.பழனி, விழாக்குழு செயலாளர் கவிஞர் இரா.தெ.முத்து, பொருளாளர் வே.மணி, பேரா.தா.ஜான்சன் வெஸ்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.