சென்னை,பிப்.11- அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தாயார் ராஜாமணி அம்மாள் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலா ளரும் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் துறை அமைச்ச ருமான தா.மோ.அன்பர சனின் தாயார் ராஜாமணி அம்மாள் ( 83) வியாழனன்று (பிப்.10) இரவு 10 மணிக்கு காலமானார். அவரது உடல் குன்றத்தூரில் உள்ள அமைச்சர் தா.மோ. அன்பர சனின் இல்லத்தில் வைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு குன்றத்தூர் இடுகாட்டில் இறுதி நிகழ்ச்சிகள் நடை பெற்றது. குன்றத்தூருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், அன்பரசனின் தாயார் ராஜாமணி அம்மாள் உடலுக்கு மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும், அவரது குடும்பத்துக்கும் ஆறுதல் கூறினார். அமைச் சர்கள் மா.சுப்பிரமணியன், ஆவடி நாசர், திமுக பொரு ளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. ஆர்.எஸ். பாரதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, கு.செல்வ பெருந்தகை, மாவட்ட ஆட்சியர்கள் ராகுல்நாத், ஆர்த்தி உள்ளிட்ட ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர்.