tamilnadu

பாலிடெக்னிக்: ஐடிஐ மாணவிகளுக்கு உதவித்தொகை நிதியமைச்சர் அறிவிப்பு

சென்னை,மார்ச் 24- ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிநிநிலை  அறிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு வியா ழனன்று (மார்ச் 24) பதிலளித்துப்பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார். “அரசுப் பள்ளிக ளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து  உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப் படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக் கப்பட்டிருந்து. இந்தத் திட்டம் பத்தாம் வகுப்பு  முடித்துவிட்டு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவி களுக்கும் பொருந்தும்” என்று கூறினார்.

காமராஜர் பெயரில் புதிய திட்டம்

தொடர்ந்து பேசிய அமைச்சர், “கோவை மெட்ரோ ரயில் முதல் கட்டப்பணிக்கு விரி வான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட் டுள்ளது. பன்னாட்டு நிதி நிறுவனங்களின் உதவி பெற்று விரைவில் பணிகள் தொடங்கப் படும் என்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். அத்திக்கடவு - அவினாசி திட்டம் வரும்  ஜூன் மாதத்தில் முழுமையாக நிறைவடை யும், காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் ரூ.1000 கோடியில்  கல்லூரி கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு கல்லூரிகளின் கட்டமைப்பு  மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நவீனமயாகும் எம்.சி.ராஜா விடுதி!

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள எம்.சி.ராஜா மாணவர் விடுதி 1921 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. சென்னை மாநகரில் பட்டியலின கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து வரும் ஒரே விடுதியாகும். இந்த விடுதி பழமையானதாகும். எனவே,  அந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக  கட்டிக்கொடுக்கப்படும். அந்த விடுதியின் வளாகத்தில் உள்ள காலி இடத்தில் 6  அடுக்குகளை கொண்ட நவீன வசதிகளுடன்  கூடிய மாணவர் விடுதி ஒன்று 7,500 சதுர  அடியில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்  என்றும் அமைச்சர் தெரிவித்தார்.