tamilnadu

img

அதிமுக ஆட்சியில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்பது வெறும் அறிவிப்புதான்

விருதுநகர், ஜன.3- விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என  கடந்த அதிமுக ஆட்சியில் வெறு மனே அறிவித்து விட்டுச் சென்று  விட்டனர். அரசாணை வெளியிட வில்லை என்று மக்கள் நல்வாழ்  வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார். விருதுநகர் அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவையை ஜனவரி 3 அன்று தமிழக மக்கள் நல்வாழ்  வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் துவக்கி வைத்தார். பின்  னர் ரூ.20 லட்சம் செலவில் கட்டப் பட்ட செவல்பட்டி புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.  ரூ.50 லட்சம் செலவில் காரியா பட்டி மற்றும் புதுப்பட்டி பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக 2 புதிய அவசர கால ஊர்தியை கொடிய சைத்து துவக்கி வைத்தார். பின் னர் விருதுநகர் மருத்துவக் கல்  லூரியில் முதலாமாண்டு படிக்  கும் 150 மாணவ, மாணவியருக்கு வெள்ளை அங்கி அணிவித்தார்.  

இந்நிகழ்வின் போது வரு வாய்-பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்தின், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு- வர்த்த கத் துறை அமைச்சர் தங்கம் தென்  னரசு, விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் மேகநாத ரெட்டி ஆகியோர் கள் உடனிருந்தனர். பின்பு நடைபெற்ற பத்திரிகை யாளர்கள் சந்திப்பில் அமைச்சர்  மா.சுப்பிரமணியன் பேசுகையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விருதுநகரில் மருத்துவக் கல்  லூரி தொடங்கப்பட்டது. இந்த  ஆண்டு ஜனவரியில் மருத்துவ மனையில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் ஊட் டச்சத்து குறைவாக உள்ள 600  குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து  வழங்கும் திட்டம் சிறப்பாக நடை பெறுகிறது. அரசு மருத்துவ மனையில் பிரசவித்த தாய்மார்  களுக்கு அவர்களின் குழந்தை யுடன் இருக்கும் புகைப்படம் எடுத்து வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

தடுப்பூசி

இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு கள் எவ்வளவு என்ற கேள்விக்கு,  தமிழகத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 96 சதவீத மும், இரண்டாவது தவணை தடுப்  பூசி 92 சதவீதத்தையும் கடந்துள்  ளது. ஒன்றிய அரசு 3 மாதங்களாக தடுப்பூசி சப்ளை மற்றும் தயா ரிப்புகளை நிறுத்திவிட்டன. தமி ழகத்தை பொறுத்தவரை 3 லட்சம்  கையிருப்பு உள்ளது. 2 லட்சத்து 60 ஆயிரம் கோவாக்சின் , 40  ஆயிரம் கோவிஷீல்டு கையி ருப்பு உள்ளது. முன் களப் பணி யாளர்களுக்கு தடுப்பூசி போடப் பட்டு வருகிறது. மூக்கின் வழி யாக செலுத்தும் மருந்தை அறி முகப்படுத்தியுள்ளனர். முதற்  கட்டமாக தனியார் மருத்துவ மனைகளுக்கு வழங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆனால் அந்த முன்னெச்சரிக்கை தடுப்பு மருந்தை தமிழக அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்க வேண்டுமென ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறினார்.

பல் மருத்துவக் கல்லூரி

விருதுநகரில் பல்மருத்துவக்  கல்லூரி தொடங்கப்படுமா? என்ற  கேள்விக்கு பதில் கூறிய அமைச் சர், விருதுநகரில் பல்மருத்துவக்  கல்லூரி தொடங்கப்படும் என்று அதிமுக ஆட்சியில் வெறுமனே  அறிவித்துள்ளனர். எந்த அர சாணையும் வெளியிடப்பட வில்லை. தமிழக முதல்வர், பல்  மருத்துவக் கல்லூரி மற்றும் செவி லியர் பயிற்சி பள்ளி ஆகியவை எந்தெந்த இடங்களில் தேவை என்பதை ஏற்கனவே ஒன்றிய அர சிடம் தெரிவித்துள்ளார். ஏற்க னவே சென்னையில் ஒன்று உள்  ளது. புதுக்கோட்டை மாவட்டத் தில் ஒன்று தொடங்கப்பட உள்  ளது. அதன் பிறகு தேவை இருக்  கும் இடத்தில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என் றார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதே என்ற கேள்விக்கு, நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலத்தடி நீரும் இல்லை, குடி நீரும் இல்லை. அந்த இடத்தில் தொடங்கி விட்டனர். அங்கு மருத்துவமனை இயங்க முடியா மல் இருந்ததற்கு காரணம், குடி நீர் இல்லாமல் தான். எனவே, தமி ழக முதல்வர், காவிரியில் இருந்து பிரதான குழாய் மூலம் குடிநீர்  கொண்டு வர ரூ.9 கோடியை  ஒதுக்கியுள்ளார். இதேநிலை தான் நாகப்பட்டினம் மாவட்டத்தி லும். எனவே, விருதுநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு குடிநீர் கொண்டு வர அமைச்சர்கள் மூலம் நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தார்.

ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் மருத்துவர்கள் பணியிடம் காலியாக உள்ளதே என்ற கேள்விக்கு.  ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் 1021 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அழைப் பாணை அனுப்பி வைக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்துள்ளன. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலு வையில் உள்ளது. அது முடிந்த வுடன் பணிநியமனம் நடைபெறும் என்றார்.

பணிநீக்கப்பட்ட 2300 செவிலியர்களுக்கு பணி 

பணி நீக்கம் செய்த 2300 செவி லியர்களுக்கு மீண்டும் பணி  வழங்குவது குறித்த கேள்விக்கு, கொரோனா காலத்தில் பணி யாற்றிய 2300 செவிலியர்கள் சான்  றிதழ் சரிபார்ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் 2020  ஏப்ரலில் நியமனம் செய்யப்பட் டுள்ளனர். நீதிமன்றங்கள் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இல் லாதவர்களின் நியமனங்களை ஏற்கக் கூடாது என கூறியுள்ளது. இருப்பினும் பேரிடர் காலத்தில்  பணியாற்றியதால் அவர்களுக்கு பணிபாதிப்பு இருக்கக் கூடாது எனவும். ரூ.14 ஆயிரத்திலிருந்து  ரூ.18 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்கி அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மற்றும் புதிய மருத்துவ மனைகள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் ஆகிய பணி யிடங்களில் அவர்கள் நிரப்பப்பட உள்ளனர் என்று அமைச்சர் தெரி வித்தார்.