கோவை, மே 13 - கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ் நாடு என்ற பாரதியின் கூற்றை உறுதி ப்படுத்தியிருக்கும் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க வேண்டாம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னி லையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசினார். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் 37-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளியன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடை பெற்றது. இவ்விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பி.காளிராஜ், பேரா சிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பேசுகையில், தமிழகத்தில் ஆண் களை விட பெண்கள் அதிகளவில் உயர் கல்வியில் படித்து வருகின்ற னர். ‘‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’’ என்கிற பாரதியாரின் கூற்று மேலும் வலுப்பெற்று வருகிறது.
இந்திய அளவில் உயர் கல்வியில் தமிழகம் 53 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து உள்ளோம். தமிழக முதல் வர் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை இரண்டு கண்கள் போல் கருதுகிறார். கல்வித்துறை மற்றும் தொழில்துறை, தொழிலாளர் நலத்துறை சார்பில் படிக்கும்போதே மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆளுநரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன், நாங்கள் இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் எதிரான வர்கள் இல்லை. அது எங்களுக்கு பிரச்சனையே இல்லை. இந்தியை தமிழகத்தில் திணிக்க வேண்டாம் என்பதே எங்களது கோரிக்கை. தமிழ கத்தில் தாய் மொழியாக தமிழ், சர்வ தேச மொழியாக ஆங்கிலம் ஆகியவை பயன்பாட்டில் உள்ளது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என பலர் கூறினர். ஆனால், வேலை கிடைக்கிறதா?. இந்தி படித்தவர்கள் இங்கு கோவையில் பானி பூரி தான் விற்பனை செய்கின்றனர்.
ஆளுநரிடம் எங்களின் உணர்வை தான் வெளிப்படுத்துகிறோம். அதனை புரிந்து கொண்டு ஆளுநர் ஒன்றிய அரசிடம் எங்கள் நிலைப் பாட்டை விளக்க வேண்டும். தமிழ் மாணவர்கள் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளத் தயாராக உள்ள னர். இந்தி மாற்று மொழி தான். அதனை கட்டாயமாக்கக் கூடாது. தமி ழகத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டு தான் கட்டாய மொழியாக உள்ளது. மாணவர்கள் மூன்றாவது மொழியாக எது வேண்டுமானாலும் படிக்கலாம். இது தான் தமிழ்நாடு கல்விக் கொள்கை குழு மூலம் செயல்படுத்தப் படும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆளுநர் பேச்சு
இதனைத்தொடர்ந்து பல்கலைக் கழக வேந்தரும், தமிழக ஆளுநரு மான ஆர்.என்.ரவி பேசுகையில், எந்த மொழியையும் ஒன்றிய அரசு திணிக்க வில்லை. எல்லா மொழிகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்கிற நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது எனத் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம்
பாரதியார் பல்கலைக் கழகத்தின் 37-ஆவது பட்டமளிப்பு விழாவில் தமி ழக ஆளுநர், உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டவர்கள் பங்கே ற்ற நிகழ்வுக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு நிகழ்ச்சி நிரல் அழைப்பிதலோடு வழங்கப்பட்ட உறையில் ரூ.500 பணமும் வைக்கப்பட்டிருந்தது. இத னைக் கண்ட பத்திரிகையாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். பல் கலைக் கழக நிர்வாகம் அதிகாரப் பூர்வமாக செய்தியாளர்களுக்கு லஞ்சம் வழங்குவதாக குற்றம்சாட்டி னர். இதைத்தொடர்ந்து பத்திரிகை யாளர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை துணைவேந்தர் காளிராஜூ விடமே பத்திரிகையாளர்கள் அனைவரும் திருப்பிக் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
மேலும், பாரதியார் பல்கலைக் கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரி வித்துள்ளது. செய்தியாளர்களுக்கு பதிவாளரின் பெயர் கொண்ட கவரில் வைத்து 500 ரூபாய் வழங்கப் பட்டிருப்பது. ஊடக நெறிகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளது.