நாகர்கோவில், ஜுலை 14- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் இறுதிக்குள் சீர்மிகு (ஸ்மார்ட்) வகுப்புகள் துவக்கப்படும் என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரியில் ஞாயி றன்று (ஜுலை14) பள்ளி மாணவ மாணவி யர்களுக்கு விலையில்லா மடிக்கணினி களை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சி யர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்றது. மடிக்கணினிகளை வழங்கி பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசிய தாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் 24 736 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ரூ.30 கோடியே 35 இலட்சத்து 84 ஆயிரத்து 928 மதிப்பில் விலையில்லா மடிக்கணினி கள் வழங்கப்படுகிறது. நாளை மாலை 4 மணிக்குள் அனைத்து மேல்நிலை முத லாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் விலை யில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டுள் ளது. மடிக்கணினி திட்டத்தின்மூலம் இது வரை 54 லட்சத்து 42 ஆயிரம் மடிக்கணினி கள் வழங்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் மாத இறுதிக்குள் கணினி மற்றும் இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் வகுப்ப றைகள் தொடங்கப்படும். கல்வியில் சிறந்து விளங்கும் 100 மாணவர்களை அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தை பற்றி அறிந்து கொள்ள அண்டை நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்ல ரூ.3 கோடியினை தமி ழக அரசு ஒதுக்கியுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையானது இந்திய நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சிறப்பான பாடத்திட்டத்தினை பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு வழங்கி வருகிறது. 1 முதல் 12-ம் வகுப்புவரை அனைத்து பாடத்திட்டங்களையும் இரண்டு வருட காலத்திற்குள் மாற்றியமைத்த பெருமை தமிழக பள்ளிக்கல்வித்துறை யையே சாரும். பள்ளி மாணவ மாணவி யர்கள் அனைவரும் கல்வியில் மட்டுமல்லா மல் இயல், இசை, நாடகம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசி னார். இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்த ரம், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தி வேல்முரு கன், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ. அசோகன், மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் டி. ஜாண்தங்கம், ஆசியர்கள், பள்ளி மாணவ -மாணவியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.