சென்னை,பிப்.21- சென்னை எண்ணூர் கோரமண்டல் உர ஆலையில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அரசு அமைத்த குழுவின் பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்துவோம் என்றும் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கோரமண்டல் உர ஆலையை மூட வேண்டியதன் அவசியம் குறித்து கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சுற்றுச் சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் உரத் தொழிற் சாலையில், விவசாயத்திற்கு தேவை யான உரங்கள் தயாரிக்கப்பட்டு வரு கின்றன. உற்பத்திக்கு தேவைப்படும் அமோனியா வாயு (திரவ நிலையில்) அவ்வப்போது வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிறகு, எண்ணூரில் சிறைய துறைமுகத்திலிருந்து உரிய குழாய்கள் மூலம் இந்தத் தொழிற் சாலையில் உள்ள சேமிப்பு தொட்டி யில் சேகரிக்கப்படுகிறது. அதன் பின்னர், உற்பத்திக்கு பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்த ஆலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று நள்ளிரவு அமோ னியா குழாய்களில் வாயுக் கசிவு ஏற்பட்டது. பிறகு, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு 20 நிமிடங்களில் குழாயில் ஏற்பட்ட வாயுக் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த செய்தி அறிந்ததும் ஆய்வுகள் நடைபெற்றது. மேலும் இந்த தொழிற்சாலையின் உற்பத்தி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. அத்துடன் 7 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த தொழில்நுட்ப குழு உர ஆலைக்கு சென்று மூன்று நாட்கள் ஆய்வுகளை மேற்கொண்டு. இதைத் தொடர்ந்து, தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், தொழிற்சாலை யில், கடலுக்கு அடியில் தற்போதுள்ள அம்மோனியா கொண்டு செல்லும் குழாய் களுக்கு பதிலாக, புதிய குழாய் கள் அதிநவீன கண்காணிப்பு தானி யங்கி மற்றும் விபத்து தடுப்பு சாதனங் களுடன் அமைக்கப்பட வேண்டும்.
தொழிற்சாலையின் தொட்டியில் சேமித்து வைக்கும் வாயு கசிந்தால் அதை தடுக்க, தொழிற்சாலை பகு மற்றும் அம்மோனியா எடுத்துச் செல்லும் குழாய் உள்பட அனைத்து இடங்களிலும் குழு தானியங்கி கட்டுப் பாடு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது அமோனியா சேமிப்புத் தொட்டி மற்றும் அமோனியா எடுத்துச் செல்லும் குழாய்களின் பாதுகாப்பு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு முறை கண்காணிக்க வேண்டும் என்ற குழுவின் பரிந்துரை களை உடனடியாக நிறைவேற்றுமாறு வாரியம், தொழிற்சாலையை அறிவுறுத்தியுள்ளது. ரூ.6 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் மேலும், சுற்றுச் சூழல் இழப்பீடாக ரூ. 5 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்து 888 கோரமண்டல் நிறுவனத்திட மிருந்து ஏன் வசூலிக்கக் கூடாது? என்றும் விளக்கம் கேட்டு அந்த நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பட்டுள் ளது. தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ள அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் இத்தொழிற்சாலை மேற்கொள்வதை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் உறுதி செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.