tamilnadu

img

விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

வேலூர், ஆக.1- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையில் விரைவில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு இதுவரை இந்தியாவில் நடைபெறாத வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் நடை பெறும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரி வித்தார். வேலூர் அப்துல்லாபுரம் பகுதியில் ரூ.30 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டுமான பணி கடந்த ஜூன் மாதம் தொடங் கப்பட்டது. இப்பணிகளை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு செய்தார். பின்னர், காட்பாடி  அருகே உள்ள டெல் தொழிற் பேட்டை வளாகத்தையும், மகிமண்ட லம் ஊராட்சியில் சிப்காட் தொழிற் பேட்டை அமையவுள்ள பகுதியை யும் அமைச்சர் துரைமுருகனுடன் ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,“வேலூர் அப்துல்லா புரத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பணிகள் துரிதமாக நடை பெற்று வருகிறது. அடுத்த 9 மாதங் களில் இப்பணிகள் முடிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். காட்பாடி அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய தொழிற்சாலைகள் காட்பாடியில் அமைக்கவும், அதேசமயம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு அதற்கான வகையில் தொழிற் பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் பெ.குமர வேல் பாண்டியன், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.