ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கண்டனம்
சென்னை: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது அநாகரிக மான செயல் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிமுக பிரச்சாரத்தில் ஆளில்லா ஆம்புலன்சை அனுப்பி இடையூறு செய்வதாக அதிமுக பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். தன்னு டைய ஒவ்வொரு கூட்டத்திலும் ஆளில்லா ஆம்புலன்ஸை தொடர்ச்சியாக அனுப்பி மக்களை சிரமத்துக்கு உள்ளாக் கும் வேலையை தமிழக அரசு செய்வதாகவும் அவர் தெரி வித்திருந்தார். அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே, ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால், ஓட்டி வரும் ஓட்டுநரே அதில் நோயாளியாக ஏற்றி அனுப்பப்படுவார் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் 108 ஆம்பு லன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை 1,330 என்றும், இந்த வாகனங்கள் உயிர் காக்கும் சேவையை செய்து கொண்டிருப் பதாகவும் தெரிவித்தார். எங்கு விபத்து ஏற்பட்டாலும் 8-10 நிமிடங்களுக்குள் சென்று அந்த ஆம்புலன்ஸ் வாக னங்கள் உயிர் காக்கும் சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை போல உல கத்தில் வேறெங்கும் இல்லை என்று அமைச்சர் பெருமை யுடன் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் வரும் வழியில் அதிமுக கூட்டத்தை நடத்திய எடப்பாடி பழனிசாமி, அவர் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விடப்படுவதாக சொல்வது தவறு என்றும், அவருக்கு ஆம்புலன்சை பார்த்தால் வேறு ஏதோ நினைவு வருவதாகவும் அமைச்சர் விமர் சித்தார். ஒரு முன்னாள் முதலமைச்சர் இப்படி மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசுவது அநாகரிகமான செயல் என்றும், இப்படி பேசுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.