சென்னை, மே 19- தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் ரூ.92.50 கோடியில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காக் களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். எதிர்காலத்தில் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்படக்கூடிய அதீத வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1996-2001ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னையில் டைடல் பூங்காவை நிறு வினார். இது மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வித்திட்டது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், தற்போது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் ஏழு மினி டைடல் பூங்காக்கள் அமைக் கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, தூத்துக் குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை யின் சார்பில் ரூ. 92 கோடியே 50 லட்சத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், வெள்ளியன்று (மே 19) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணெலி வாயிலாக அடிக்கல் நாட்டி னார். தூத்துக்குடி மாவட்டம், மீள விட்டான்-2 பகுதியில் 4.16 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ. 32 கோடியே 50 லட்சத்தில் 63,100 சதுர அடி பரப்பள வில் தரை மற்றும் 4 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டப் படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளை யார்பட்டியில் 3.40 ஏக்கர் நிலப்பரப்பள வில் ரூ. 30 கோடியே 50 லட்சத்தில் 55,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 3 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டப்படவுள்ளது. இதேபோல், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், ஆணை கவுண்டன் பட்டி மற்றும் கருப்பூர் பகுதிகளை உள்ளடங்கிய நிலப்பரப்பளவில் ரூ. 29 கோடியே 50 லட்சத்தில், 55,000 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் 3 தளங்கள் கொண்ட மினி டைடல் பூங்கா கட்டப்பட வுள்ளது. இந்த பூங்காக்கள் அந்தப் பகுதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று மாநில அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கி றது.