மேட்டூர்,ஏப்.24- கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 3,460 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. திறப்பை காட்டிலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.