tamilnadu

img

மேட்டூர் அணை நிரம்பியது!

சேலம், ஜூலை 16- கர்நாடக அணைகள் நிரம்பி உபரி நீர் தமிழகத் திற்கு திறக்கப்பட்டுள்ளதால் கடந்த 5 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது.  சனிக்கிழமையன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம்  119.29 அடியாக இருந்த நிலையில் காலை 10 மணிய ளவில் முழுக் கொள்ளள வான 120 அடியை எட்டியது. இதன்மூலம், தனது வர லாற்றில் 42 ஆவது முறை யாக மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள் ளது. அணை நிரம்பியதால் காலை 10.30 மணி அளவில் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு, 16 கண் மதகு கள் வழியே விநாடிக்கு 50, 000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 8 மாதங்களில் 2 ஆவது முறையாக 16 கண் மதகுகள் வழியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.