மெட்ரோ நிறுவனத்திற்கு உயரிய விருது
போக்குவரத்து துறையில் சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு 2025 உலக சுற்றுச்சூழல் சிறப்பு விருது வழங்கப்பட்டது. புதுதில்லியில் உள்ள ரோசேட் ஹவுஸ் ஏரோசிட்டியில், உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (Global Energy and Environment Foundation – GEEF) ஏற்பாடு செய்த, உலக எரிசக்தி தலைவர்கள் மாநாட்டில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான “உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம்” என்னும் உயரிய விருதைப் பெற்றுள்ளது.
விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு
சென்னை: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. www.tngasa.in என்ற இணையதள முக வரியில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். முதல் நாளே ஆயிரக்கணக்கானோர் போட்டி போட்டு விண்ணப்பித் தனர். மே 26 அன்று மாலை நிலவரப்படி 2,15,809 பேர் விண்ணப்பப் பதிவும், அவர்களில் 1,74,289 பேர் விண்ணப் பக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 28) நிறைவடையும் நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புதிய வகை கொரோனா இல்லை
சென்னை: தமிழ்நாட்டில் தினமும் 10-15 பேருக்கு கொரோனா பரவல் ஏற்படுகிறது. இது, வீரியம் இல்லாத கொரோனாதான். பொதுமக்கள் அச்சப்பட தேவை யில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் கூட தேவையில்லா நிலையில்தான் பரவல் உள்ளது. தற்போது வரை, புதிய வகை கொரோனா தொற்று எதுவும் கண்டறியப் படவில்லை என பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித் துள்ளது.
புகழேந்தி புதிய மனு
சென்னை: அதிமுக, இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவையும் எடுக்காத நிலை யில், மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் களை அங்கீகரித்து எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித் தால், அதனை ஏற்கக் கூடாது என்று தேர்தல் ஆணை யத்தில் புகழேந்தி புதிதாக மனு அளித்துள்ளார்.
ரயிலில் 2 ஆம் வகுப்பு காத்திருப்பு பட்டியலுக்கு ஏசி இடங்கள் ஒதுக்கீடு
சென்னை, மே 27 - ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி (ஸ்லீப்பர் பெட்டிகளில்) பெட்டிகளில் டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு, ஏசி வகுப்பு பெட்டிகளில் காலியாக உள்ள இடங் களை, கூடுதல் கட்டணம் இன்றி ஒதுக்கும் வசதி மேலும் 2 நிலைகள் வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம், 2 ஆம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி களில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணி களுக்கு 3 ஆம் வகுப்பு ஏசி அல்லது 2 ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காலியாக உள்ள இடங்கள் கூடுதல் கட்ட ணம் இன்றி ஒதுக்கப்பட உள்ளது. பயணிகளின் காத்திருப்போர் பட்டியலை குறைக்க, கூடுதல் பெட்டிகள் சேர்ப்பது உட்பட பல நடவடிக்கை களை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. இது தவிர, ஒரு ரயிலில் 2 ஆம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர் களுக்கு 3 ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் காலி யிடங்கள் இருந்தால், அதில் ஒதுக்கீடு செய்யும் முறை யும் இருக்கிறது. இந்த முறை கடந்த 2006 இல் அறிமுகப் படுத்தப்பட்டது. இத்தகவல் ரயில்வே வாரிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுற்றறிக்கை அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது!
சென்னை: ஜவஹர்லால் நேருவின் 61 ஆவது நினைவு தினத்தையொட்டி, சத்தியமூர்த்தி பவ னில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக் கரசர் ஆகியோர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருநாவுக்கரசர் செய்தியாளர்களி டம், “இந்தியாவின் மக்கள் தொகையானது 150 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகை, தேர்தல் முறை போன்ற வற்றை கணக்கில் கொண்டு பார்க்கும் போது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது நடை முறைக்கு சாத்தியமில்லாதது” என்றார்.
காரைக்கால் ஜிப்மர்: 2027இல் பயன்பாடு
புதுச்சேரி: காரைக்காலில் 470 படுக்கை வசதி கள் கொண்ட ஜிப்மர் மருத்துவமனை 2027 ஜூன் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என புதுச் சேரியில் ஒன்றிய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். ஜிப்மர் மருத்துவ மனைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1,450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
விமான எரிபொருள் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
சென்னை, மே 27- சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இருந்து தினந்தோறும் டேங்கர் லாரிகளில் விமானங்களுக்கு பெட்ரோல் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 5 வருடங்க ளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி வழங்கப்பட்டு வந்த வாடகை தற்போது குறைத்து வழங்கப்படுவதாகவும், இதை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் டேங்கர் லாரி உரிமையாளர்கள், பாரத் பெட் ரோலியம் நிறுவன நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். வாடகையை நிர்வாகம் உயர்த்தி வழங்கவில்லை. இதனால் தண்டையார்பேட்டை பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து விமான நிலையத்திற்கு கொண்டு செல்லும் பெட்ரோல் டேங்கர் லாரிகளின் உரிமை யாளர்கள் மே 27 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.