tamilnadu

img

62.37 லட்சம் விஐபி வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் போனதாக மெகா மோசடி

சிஏஜி அறிக்கை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.,

    மதுரை,ஆக.29-  

     பரனூர் டோல்கேட்டில் 62.37 லட்சம் விஜபி வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் போனதாக  மோசடியாக கணக்கு காட்டப்பட்டுள் ளது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு. வெங்கடேசன்  சிஏஜி அறிக்கையை  ஆதாரமாகக் கொண்டு அம்பலப் படுத்தியுள்ளார்.  

     இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

     ஒன்றிய பாஜக அரசின் ஏழு ஊழல் களைப் பற்றி பேசியுள்ள சிஏஜி அறிக்கை ஒரு பெரும் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது.  

     அதில் முக்கியமான ஒன்று  “டோல்கேட்” ஊழல். டோல் கேட்டு களில் இரண்டு வகை உண்டு. ஒன்று  பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள டோல் கேட்டுகள் (Public Funded Toll Gates).

     இரண்டா வது வகை, தனியார் பணத்தில் அமைக் கப்பட்ட சாலைகளில் உள்ள டோல்  கேட்டுகள். (BOT toll gates). செங்கல்பட்டு - பரனூர் டோல்கேட்  அதிகமான வாகனங்கள் கடந்து செல்லும் பொதுப் பணத்தில் அமைக்கப் பட்ட சாலையில் உள்ள டோல் கேட்.  அதன் வழியாக ஆகஸ்ட் 2019 இல் இருந்து ஜூன் 2020 வரையிலான காலத் தில் 1 கோடியே 17 லட்சத்து 08 ஆயிரத்து 438 வாகனங்கள் கடந்து சென்றுள் ளன. ஒரு கோடிக்கும் அதிகமான வாக னங்கள் என்பது மலைக்க வைக்கும் எண்ணிக்கை. ஆனால் அதை விட மலைக்க வைக்கிற தகவலை சிஏஜி அறிக்கை தருகிறது. அவற்றில் 62  லட்சத்து 37 ஆயிரத்து 152 வாகனங் கள் டோல் கட்டணம் செலுத்தாமல் போன வி.ஐ.பி வாகனங்களாம்.  

     பரனூர் டோல் கேட் மட்டுமல்ல. பொதுப் பணத்தில் அமைக்கப்பட்ட சாலைகளில் உள்ள மற்ற டோல் கேட்டு களிலும் இதுதான் நிலைமை. ஆத்தூர்  டோல் கேட்டில் 36 சதவீதம் வாகனங் கள் விஐபி இலவசம். ஜனவரி 2020 முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலத்தில் கப்பலூர் டோல் கேட்டில் 25 சதவீத வாக னங்கள் விஐபி இலவசம். லம்பால குடியில் 18 சதவீதம்.  

     ஆனால் தனியார் டோல் கேட்டு களில் இந்த கணக்கு தலை கீழாக உள் ளது. செங்குறிச்சி டோல் கேட்டும் சென்னை சாலையில்தான் உளுந்தூர் பேட்டை அருகில் உள்ளது. அங்கே ஜனவரி 2020 முதல் செப்டம்பர் 2020 வரை கடந்து சென்ற வாகனங்கள் 49  லட்சத்து 77 ஆயிரத்து 901. அவற்றில்  கட்டணம் செலுத்தாத விஐபி வாக னங்கள் 12.60 சதவீதம். கணியூர் டோல் கேட்டில் 11.12 சதவீதம். வேலன் செட்டி யூர் டோல் கேட்டில் 7.13 சதவீதம். பாளை யம் டோல் கேட்டில் 6.93 சதவீதம். ஸ்ரீ வை குண்டம் டோல் கேட்டில் 6.76 சதவீதம். கொடை ரோடு டோல் கேட்டில் 6.06 சதவீதம்.

      பொதுப்பணத்தில் அமைக்கப்பட்ட சாலையான பரனூர் டோல்கேட்டில் 53  சதவீதம் ‘விஐபிகள்’ பயணம் செய் கிறார்கள்; அதுவே தனியார் பணத்தில் அமைக்கப்பட்ட கொடைரோடு டோல்கேட்டில் 6 சதவீதம்தான் ‘விஐபி கள்’ பயணம் செய்கிறார்கள்;  என்றால் எவ்வளவு பெரிய திருட்டுத்தனம் அரங்கேறி இருக்கிறது.

      சிஏஜி அறிக்கை இன்னொரு குண்டை போட்டு இருக்கிறது. விஐபி  சென்றார்கள் என்பதற்கு எந்த ஆதார மும் சேகரிக்கப்படவில்லை. பதிவுகள் கூட செய்யப்படவில்லை. ஆனால்  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜூலை 2021 இல் விளக்கம் தந்துள்ளது. இந்த பொதுப் பண டோல்கேட்டுகளில் தனியார் முகவர்கள்தான் வசூல் பொறுப்பை ஏற்றுள்ளார்கள், வசூல் இடர் எல்லாம் அவர்களின் மொத்த பொ றுப்பு; ஆகையால் அரசுக்கு இழப்பு ஏதுமில்லை என்பதே அந்த விளக்கம்.  விஐபி வாகனம் பற்றி சொல்லப்பட்டுள்ள இந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்று சி.ஏ.ஜி அறிக்கையே திருப்பி அடித்துள்ளது.  

     பொது நிதியில் உருவான டோல்கேட்டுகள் மற்றும் தனியார் டோல் கேட்டுகள் இரண்டிற்கும் விதிகள் ஒன்று தான். விதிகளை நிறைவேற்றுகிறார் களா என்பதை பார்க்க வேண்டிய பொறுப்பு நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு இல்லையா? அரசுக்கு இழப்பு இல்லை என்பது உண்மையா? வாங்கிவிட்டு மறைத்தார்களா? வருவாய் வாய்ப்புகளை வைத்துத்தானே தனியார்களுக்கு வசூல் பொறுப்பு ஒப்படைக்கப்படும்! அப்படி என்றால் எத்தனை மடங்கு தொகையை இவர்கள் வாரிச்சுருட்டி உள்ளனர்.

    இன்னொரு “சுவாரஸ்யமும்” உண்டு. 11.09.1956 க்கு பின்னால் கட்டப்பட்ட பாலங்களில் செல்வதற்குத்தான் டோல் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் 1954 இல் கட்டப்பட்ட பரனூர் டோல் கேட் பாலம் ஒன்றின் வழி பயணத்திற்கு 2018 - 2021 இல் ரூ. 22.10 கோடி வசூல் ஆகியுள்ளது. பரனூர் டோல்கேட் சிஏஜி அறிக்கையால் பலவகையிலும் ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ டோல்கேட்டாக மாறியுள்ளது.