கரூர், மே 3- உழைக்கும் மக்களின் உரிமை தினமான மே தினத் தன்று சிஐடியு, ஏஐடியுசி சார் பில் கரூர், அரியலூரில் மே தின பேரணி - பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் உள்ள காமராஜர் சிலை முன்பி ருந்து துவங்கிய பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி ஜவ கர்பஜார், தலைமை தபால் நிலையம், பழைய திண்டுக் கல் சாலைவழியாக சென்று கரூர் லைட் ஹவுஸ் கார்ன ரில் பொதுக்கூட்ட மேடை முன்பு நிறைவடைந்தது. பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட் டத் தலைவர் கே.குப்பு சாமி முன்னிலை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செய லாளர் வீ.அமிர்தலிங்கம், இளைஞர் பெருமன்ற மாநி லச் செயலாளர் க.பாரதி, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் மா.ஜோதிபாசு, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. முருகேசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.என்.நாட் ராயன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ்.வடி வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், கரூர் மாநக ரத்திற்குட்பட்ட வெங்கமேடு, கோதூர், 5-ஆவது வார்டு, வடிவேல் நகர் சிபிஎம் கிளை களின் சார்பில் சார்பில் நடை பெற்ற விழாவிற்கு மாநகரக் குழு உறுப்பினர்கள் கோபால், தியாகராஜன், நீலமேகம் ஆகியோர் தலைமை வகித்த னர். மாவட்டக் குழு உறுப்பி னர் ஆர்.ஹோச்சுமின் செங் கொடியை ஏற்றினார். கிளை செயலாளர்கள் பாலசுப்பிர மணி, தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.