சென்னை, நவ.24- மாணவி ஸ்ரீமதி மரணத் திற்கு நீதி கேட்டு டிஜிபி அலு வலகத்தை முற்றுகையிடும் மாதர் சங்கத்தின் போராட் டத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் கடந்த 2 நாட்களாக வட மாவட்டங்களில் உள்ள மாதர் சங்க மாவட்ட நிர் வாகிகளை மிரட்டினர். போராட் டத்தில் பங்கேற்கக் கூடாது என்று கூறினர். ஸ்ரீமதியின் தாயாரையும் இந்த போராட் டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என மிரட்டினர். இந்த போராட்டத்திற்கு செல்லும் மாதர் சங்கத்தினருக்கு பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங் களை வழங்கக்கூடாது என்று தனியார் பேருந்து உரிமையா ளர்களை மிரட்டினர். காவல் துறையின் அனைத்து கெடு பிடிகளையும், அச்சுறுத்தலை யும் தாண்டி சென்னை, திரு வள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி புரம், கடலூர், விழுப்புரம், கள் ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து மாதர் சங்கத்தி னர் சென்னை நோக்கி புறப்பட்டனர்.
அலுவலக வாயிலில் கைது
திருவல்லிக்கேணியில் உள்ள மாதர் சங்க மாநிலக்குழு அலுவலகத்தில் இருந்து போராட்ட இடத்திற்கு செல்ல முயன்ற மாதர் சங்க மாநிலத்தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.ராதிகா ஆகியோரை அலுவலகம் அரு கிலேயே காவல்துறையினர் கைதுசெய்து காவல் நிலையத் திற்கு கொண்டு சென்றனர்.
வீடுகளுக்கே சென்று மிரட்டல்
கடலூர் மாவட்டம் முழுவ தும் புதனன்று (நவ.23) இரவு 12 மணிக்கு மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகளின் வீடு களுக்கு சென்ற காவல் துறை அதிகாரிகள் அவர்களை மிரட்டி யதோடு சென்னைக்கு வாக னத்தில் சென்றவர்களை தடுத்த னர். சிதம்பரம் ரயில் நிலையத் தில் டிக்கெட் எடுக்க சென்றவர் களை தடுத்து நிறுத்தினர். டிக் கெட் கவுண்டரை மூடிவிடும் படி வாய்மொழி உத்தரவிட்டனர். இதனால் பேருந்து மூலம் செல்ல ஆவிணங்குடி பேருந்து நிலையத்திற்கு வந்தவர்களை யும் காவல்துறையினர் தடுத்த னர். அதேபோல் நெய்வேலி யில் மாதர் சங்க மாவட்டச் செய லாளர் மாதவியின் வீட்டுக்கு சென்று போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று மிரட்டி னர். கடலூர் வன்னியார் பாளை யத்தில் நகரச் செயலாளர் சாந்த குமாரி வீட்டிற்கும் காவல்துறை அதிகாரிகள் சென்றனர்.
அச்சரப்பாக்கத்தில் 50 பேர் கைது
இதற்கிடையில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பேருந்து மற்றும் வேன் மூலம் வந்த வர்களை அச்சரப்பாக்கம் மற்றும் செங்கற்பட்டு சுங்கச் சாவடிகளில் தடுத்து நிறுத்தி மாதர் சங்கத்தை சேர்ந்த 50 பேரை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்ட பங்களில் அடைத்து வைத்த னர். இதுபோன்று சென்னை நோக்கி வரும் நெடுஞ்சாலை களில் ஆங்காங்கே மடக்கி கைது செய்துள்ளனர்.
வீட்டுச்சிறை
அதேபோல் ரயில் மூலம் புறப்பட்டவர்களையும் அந்தந்த ரயில் நிலையங்களில் கைது செய்துள்ளனர்.மேலும் அனைத்து சுங்கச்சாவடிகளி லும் காவல்துறையினரை குவித்து வழி மறித்து கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத் தலைவர் இ.மோக னாவை அவரது வீட்டில் வைத்தே கைது செய்தனர். கும்மி டிப்பூண்டி வட்டத் தலைவர் காமாட்சி, செயலாளர் சுமதி இரு வரையும் வீட்டிலேயே சிறை வைத்தனர். இத்தனை மிரட்டல், கைது நடவடிக்கைகளையும் மீறி திட்டமிட்டபடி வியாழ னன்று(நவ.24) காலை டிஜிபி அலுவலகம், மெரினா கடற் கரை சாலை, டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை, லைட் ஹவுஸ், சிட்டி சென்டர், கல் யாணி மருத்துவமனை என்று பல்வேறு இடங்களிலும் ஒன்று திரண்ட மாதர் சங்கத்தினர் டிஜிபி அலுவலகம் நோக்கி சென்ற போது கைது செய்யப்பட்டனர்.
பணிக்கு சென்ற பெண்கள் கைது
குறிப்பாக, கடற்கரை காம ராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலையில் பணிக்கு சென்ற பெண்களையும் விசாரித்து கைது செய்தனர். கடலூரில் இருந்து வந்தவர்களை ராணி மேரி கல்லூரி அருகேயும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களை கடற் கரை காமராஜர் சாலையிலும் கைது செய்தனர். செங்கல்பட்டில் இருந்து வந்தவர்களை ராதாகிருஷ் ணன் சாலையில் சிட்டி சென்டர் அருகே கைது செய்தனர். ஆட்டோவில் வந்தவர்களை கீழே கூட இறங்க விடாமல், ஆட்டோவிலேயே கைது செய்து அழைத்துச் சென்றனர். இப்படி சென்னையில் மட்டும் 500க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 2 ஆயிரத்திற் கும் மேற்பட்டோரை போராட்டத் தில் பங்கேற்க விடாமல் தடுத்த னர்.