சென்னை,டிச.23- சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழ் படைப்புகள், எழுத்தாளர் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: 2022 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதில், ‘காலாபாணி’ – வர லாற்று புனைவு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளது. ஐ.ஏ.எஸ் அதி காரியாக குறிப்பிடத்தக்க விதத்தில் பணியாற்றிய முனைவர் மு.ராஜேந்திரனின் எழுத்துப்பணியும் விருதுக்கு உரியதாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. மதுரை மாவட்டம் வடகரை கிராமத்தில் பிறந்த அவர், அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பு முடித்ததுடன், திருக்குற ளில் சட்டக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம்பெற்றுள் ளார். ஏற்கனவே வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு, 1801 ஆகிய நாவல்களை எழுதி தமிழுக்கு வழங்கி யுள்ளார். காலாபாணி – நாவல் இந்திய விடு தலைப் போராட்ட காலத்தை மைய மாக கொண்டு எழுதியதாகும். முதல் சுதந்திர போராட்டம் என வரலாற்றில் அறியப்படும் சிப்பாய் புரட்சிக்கு முன்னதாகவே தமிழக மண்ணில் நிகழ்ந்த விடுதலைப் போராட்ட பதிவு களை காலா பாணி உள்ளடக்கி யுள்ளது. கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போராடி தோற்கடிக்கப்பட்ட சிவகங்கை அரசர் வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கி புனையப்பட்டுள்ளது. இந்த நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றிருப்பதன் மூலம் தமிழ் மண்ணில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் இன்னும் பரவ லான வாசகர்களை அடையும் என்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
எழுத்தாளர் முனைவர் மு.ராஜேந்திர னுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். அதே போல மொழிபெயர்ப்புக்காக வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதினை கே.நல்லதம்பி பெற்றுள் ளார். கன்னட மொழியில் நேமிச்சந்திரா எழுதிய யாத்வேஷம் என்ற நாவலை கடும் சிரத்தையெடுத்து தமிழில் கொண்டுவந்திருக்கிறார் நல்லதம்பி. மொழியாக்க நாவல் என்ற உணர்வே ஏற்படாத விதத்தில் தமிழில் வந்திருக் கும் இந்த நாவல் இரண்டாம் உல கப்போர் காலத்தில் ஐரோப்பாவில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்ச மடைந்த யூதக் குடும்பத்தை பற்றிய தாகும். நாஜி ஹிட்லரின் காலம் முதல், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வரை பேசக்கூடிய மிக முக்கியமான புனைவு, சாகித்ய அகாடமி மூலமாக கவனம் பெற்றிருப் பது பாராட்டுக்குரியது. மொழிபெயர்ப் பாளர் நல்லதம்பி இன்னும் பல நூல் களை தமிழுக்கு வழங்க வேண்டும். தமிழின் முக்கியமான எழுத்தாளர் களில் ஒருவரான பெருமாள் முருகனின் ‘பூனாட்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ என்ற நாவல் ஆங்கிலத்தில் மொழி யாக்கம் செய்யப்பட்டதற்காக என்.கல்யாண ராமனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பதும் பாராட்டுக்குரியது. விருதாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி மகிழ்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.