tamilnadu

சிறுவாணியே எங்கள் அடையாளம்! சூயசே வெளியேறு!!

கோயம்புத்தூர், ஜூலை 31- “கோவை மாநகராட்சி பகுதி களில் ஏழை மக்கள் குடியிருப்புகளில் உள்ள பொதுக் குழாய்களை அப்புறப் படுத்தக் கூடாது; சிறுவாணியே எங்கள் அடையாளம் சூயஸ் நிறுவனமே வெளியேறு” என்கிற முழக்கத்துடன்  கோவை மாநகராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சி யினர் நூற்றுக்கும் மேற்பட்டோர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாநகரப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறு வனத்திற்கு கடந்த அதிமுக ஆட்சி தாரை வார்த்துக்கொடுத்தது. குடிநீர்  விநியோகத்தை கோவை மாநக ராட்சியே மேற்கொள்ள வேண்டும், அந்நிய நாட்டு நிறுவனத்திடம் ஒப் படைக்கக்கூடாது என அப்போ திருந்தே மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.  

சூயஸ் நிறுவனம் வந்தால் பொதுக்குழாய்கள் அகற்றப்படும், குடிநீர் விநியோகம் வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு ஏற்ப விநியோகிக்கப்படும், உழைப்பாளி மக்களின் குடியிருப்பு பகுதிகள் வறட்சி காலத்தில் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது; குடிநீருக்கான கட்ட ணம் அபரிமிதமாக உயர்த்தப்படும் என தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி வந்தது. ஆனால், அதிமுக ஆட்சியாளர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு, இது வதந்தி என, இக்கருத்தை வெளி யிட்ட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்.  மார்க்சிஸ்ட் கட்சி  முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதை சூயஸ் நிறுவனம் மற்றும் மாநகராட்சியின் செயல்பாடுகள் நிரூபித்து வரு கின்றன. இதன்தொடர்ச்சியாக, கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுக் குழாய்களை அகற்றுவது தொடர்பாக திங்களன்று நடைபெறும் கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட உள்ளது தெரியவந்தது.  இதனையறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்ம நாபன் தலைமையில்  300க்கும் மேற்பட்டோர் திங்களன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு  திரண்டு, ‘சிறுவாணியே நமது அடை யாளம், சூயஸ் நிறுவனத்தை வெளியேற்று’ என ஆவேச முழக்கங் களை எழுப்பினர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயற்சித்தனர். இதில், லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

பேச்சுவார்த்தை 

இதனிடையே, மாநகராட்சி ஆணையர் மார்க்சிஸ்ட் கட்சி யின் தலைவர்களை பேச்சுவார்த்தை க்கு அழைத்தார். இதில், பொதுக்குழா ய்களை அகற்றமாட்டோம் எனவும், ஒரு சென்ட் அளவுள்ள வீட்டு மனை களுக்கு ரூ 250 மட்டும் வைப்புத் தொகையாக நிர்ணயிக்கிறோம் என உறுதியளித்துள்ளார்.  இதுகுறித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோ கத்தை மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும். சூயஸ் நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணியக் கூடாது என்பதே எங்களது முக்கிய மான கோரிக்கையாகும்.  தற்போது முன்னுக்கு வந்துள்ள விவகாரத்தில் பொது குழாய்கள் அப்புறப்படுத்தப்பட மாட்டாது, வைப்புத்தொகை கட்டணத்தில் உள்ள  குறைபாடுகளை நீக்குவதாக ஆணை யாளர் உறுதி அளித்துள்ளார்.  ஆகவே, தற்காலிகமாக இந்த  முற்றுகை போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம். இதேபோன்று திடக்கழிவு மேலாண்மையை தனியா ருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கை யை வன்மையாக மார்க்சிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இதற்கான தொடர் போராட்டத்தையும் மேற்கொள்வோம் என்றார்.  முன்னதாக, மாநகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை ஏற்பதாக தெரிவித்ததையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை போலீசார் விடுவித்தனர். இப்போராட்டத்தில்,  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் யு.கே.சிவஞானம், கே. அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.