தேனி, மார்ச் 13- வன உரிமை சட்டம் 2006- ஐ கணக்கில் கொள்ளாமல் மலை மாடுகளை வனப்பகுதி களில் மேய்க்க தடை விதித்துள்ள தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல . நாட்டு மாடு ,மலை மாடு களை பாதுகாக்க வனப்பகுதிகளில் அனு மதிச் சீட்டு அளித்து, மேய்ச்சலுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என உயர்நீதி மன்றத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேனி மாவட்டக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை விடுத் துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் மலைமாடுகள் மேய்வதை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 2 நீதி பதிகள் கொண்ட அமர்வு கடந்த 4 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பால் பாரம்பரியமாக காடு களை நம்பி வாழும் ஆதிவாசிகள்,வன விவ சாயிகள், மாடு வளர்ப்போர் காலம்காலமாக வனத்தை ஒட்டி வாழ்ந்து வருகிற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தீர்ப்பு குறித்து மீண்டும் 17 ஆம் தேதி மறு பரிசீலனை செய்து தீர்ப்பில் திருத்தம் செய்ய இருப்பதாக வழக்கை விசாரித்த நீதி பதிகள் அறிவித்துள்ளனர் .
மூன்று தலை முறைகளாக வனப் பகுதிகளில் மேய்ச்ச லுக்கு, கால்நடைகளுக்கு கால்நடை மருத்து வர் பரிசோதித்து ,சான்று பெற்று வனச்சரக ரிடம் விண்ணப்பித்து அனுமதிச் சீட்டு பெற்று மேய்த்து வருகிறார்கள் .இதனால் வனமும் செழிப்பதோடு,நாட்டு மாடுகள் இனம் பாது காக்கப்படுகிறது . தற்போது நடந்த அவனியா புரம், பாலமேடு,அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களில் தேனி மாவட்டத்தை சேர்ந்த காளை கள் சிறப்பிடத்தை பெற்றுள்ளன .
தேனி மாவட்ட நாட்டு மாடுகள் ,மலை மாடுகள் பாரம் பரிய இனத்தை சேர்ந்த பாதுகாக்கப்பட வேண்டிய மாடுகள் ஆகும் .ஆறு மாதம் மலை யிலும் ஆறு மாதம் தரையிலும் மேய்ந்து கொண்டிருக்கும் குணத்தை பெற்றது .முழுக்க முழுக்க விவசாய தேவைக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது . வனப்பகுதி களில் நாட்டு மாடுகளுக்கு தடை என்பது இந்த இனத்தையே அடியோடு அழிப்பதற்கு சமமாகும். நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பில் ஒன்றிய அரசால் இயற்றப்பட்ட 2006 -வன உரி மைச்சட்டத்தில் “மேய்ச்சல்”உரிமை சட்டப் படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது .வன உரிமை சட்டம் 2006- ஐ கணக்கில் எடுத்துக் கொண்டு வனத்தை நம்பி வாழ்ந்து வரும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு தீர்ப்பை மறுபரி சீலனை செய்து ,மேகமலை உள்பட சரணால யங்கள், வனப் பகுதிகளில் நாட்டு மாடுகள், மலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதித்து, வனத்துறை உரிய அனுமதி சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.