சென்னை,நவ.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டு மென்று 1938ஆம் ஆண்டிலிருந்து போராடியது இந்திய பொதுவுடைமை இயக்கம். இந்திய விடு தலைக்குப் பிறகும் இந்த கோரிக்கையை வலி யுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. அரசின் அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு, உயிர்த் தியாகம் என்று நீடித்தப் போராட்டங்களுக்கு பிறகே மத்திய காங்கிரஸ் அரசாங்கம் மொழி வாரி மாநிலங்கள் என்ற கோரிக்கையை ஏற்று 1956 நவம்பர் 1 ஆம் தேதி சென்னை மாநிலம், கர்நாடக ஏகிகரண சளுவளி, நவ கேரளா, விசா லாந்திரா, சம்யுக்த மகாராஷ்டிராஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்மொழி பேசும் மக்கள் வாழக் கூடிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட் டத்தின் விளைவாகத்தான் திருத்தணி வட்டமும், கன்னியாகுமரி மாவட்ட மும் தமிழகத்தின் பகுதியாக இணைக் கப்பட்டு தற்போதுள்ள “தமிழ் மாநிலம்”உருவானதும் இதே நாளில் தான். இந்த கால கட்டத்தில் திமுக- திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து போராடிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உருவாக்கப்பட்ட தமிழ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட வேண்டுமென பல கட்ட போராட்டங் கள் தமிழ்நாட்டில் நடைபெற்றன.
நீண்ட போராட்டத்திறகுப் பிறகு, தமிழ் மொழி அடிப்படையிலான மாநிலம் உருவான போதும், அதற்கு சென்னை மாகாணம் என்றே பெயர் சூட்டப் பட்டது. தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென சட்டமன்றத்தில் கம்யூ னிஸ்ட்டுகள் வலுவாக குரல் கொடுத்தார்கள். நாடாளுமன்றத்தில் 1961ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டுமென தோழர் பி.ராமமூர்த்தி சட்ட திருத்த மசோதாவை முதன்முதலில் கொண்டு வந்தார். இம்மசோதா விவாதத்திற்கு வரும் நேரத்தில், தோழர் பி.ராமமூர்த்தி கைது செய்யப் பட்டு, சிறையிலிருந்த சூழ்நிலையில் நாடாளு மன்றத்தில் இம்மசோதாவை முன்மொழிந்து மேற்கு வங்கத்தைச் சார்ந்த தோழர் பூபேஷ் குப்தா நாடாளுமன்றத்தில் வாதாடினார். பேரறி ஞர் அண்ணா அவர்களும் இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி சங்கர லிங்கனார் விருதுநகரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டார். இறுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சங்கரலிங்கனார் 76ஆவது நாள் மரணமடைந்தார். தனது மரணத்திற்குப் பின் உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என எழுதி வைத்த உயிலின் அடிப்ப டையில் அவரது உடலை கம்யூனிஸ்ட் தலை வர்கள் கே.பி.ஜானகி அம்மாள், கே.டி.கே.தங்க மணி ஆகியோர் பெற்று அடக்கம் செய்தனர். இறுதியில் 1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகே,1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி “தமிழ்நாடு” என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. எனவே, மேற்கண்ட இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகளையும் கொண்டாடுவதே பொருத்த மானதாக இருக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.