tamilnadu

img

போராடும் ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தி தீர்வு காண்க!

பணிநிரந்தரம் கோரி போராடும் ஆசிரியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் 
கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சம வேலைக்கு சம ஊதியம்,  முழுநேர ஆசிரியர் பணி, பணிநிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசி ரியர்கள் கடந்த ஒரு வாரமாக உண்  ணாவிரதப் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இப்போராட் டத்தில் கலந்து கொண்ட பலர் உடல்  நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். அரசு இவர்களோடு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆயினும், கோரிக்கைகள் நிறை வேற்றப்படாத சூழ்நிலையில் போராட்டத்தை தொடர்ந்து வரு கின்றனர். இந்நிலையில் போரா டும் ஆசிரியர்களை கைது செய்தி ருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆசி ரியர் போராட்டம் தொடரும் நிலை யில் மாணவர்களின் கல்வியும்  பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, போராடும் ஆசிரியர் களின் கோரிக்கைகளின் மீது கால தாமதமின்றி பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டு மெனவும், ஆசிரியர்கள் மீது கைது போன்ற நடவடிக்கைகளை மேஙற கொள்ளக் கூடாது எனவும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.