கரூர், ஜுன் 12- கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வீரணம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தமிழக அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 7 ஆம் தேதி புதன்கிழமை தொடங்கியது. ஊருக்கு பொதுவான இடத்தில் இருக்கும் இந்த காளி யம்மன் கோவில் திருவிழா வில் அதே ஊரில் வசிக்கும் பட்டியலின பிரிவைச் சேர்ந்த பெரியசாமி மகன் பி.சக்திவேல் காளியம்மன் கோவிலுக்குள் வழிபட புதன்கிழமை காலை 7 மணியளவில் சென்றபோது, வீரணம்பட்டியைச் சேர்ந்த துரைசாமி மகன்கள் மாணிக் கம், பிரகாஷ் ஆகியோர் சக்திவேலை தடுத்து நிறுத்தி யதுடன், சட்டையை பிடித்து இழுத்து கோவிலுக்கு வெளியே தள்ளியுள்ளனர். இந்த தீண்டாமை கொடு மையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.
கோட்டாட்சியரை முற்றுகையிட்ட சாதி ஆதிக்க சக்திகள்
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தாக்குதலுக்கு உள்ளான பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் அழைத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் சாதி ஆதிக்க சக்திகள் வரு வாய் கோட்டாட்சியரை முற்றுகையிட்டு சுமார் 4 மணி நேரம் கோவில் அருகே அவரை சிறைபிடித்தும், வாகனத்தை மறித்து முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாதி ஆதிக்க பிரிவினரிடம், சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தியும் கோவிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள முன்வர வில்லை, பின்னர் கோவி லுக்குள் அனுமதிக்கா விட்டால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் படும் என்று எச்சரித்தார். அப்போதும் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த னர். இதன் பின்னர் வரு வாய் கோட்டாட்சியர் புஷ்பா தேவி கோவிலுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் கோட் டாட்சியரை மீட்டு பாது காப்பாக அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரில் ஆய்வு
பாதிப்புக்கு உள்ளான பட்டியலின இளைஞரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாலா ஆகியோர் வீரணம்பட்டிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, ஆறுதலும், ஆதரவும் தெரிவித்தனர். இப்படியொரு தீண்டா மை வன்கொடுமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டி ப்பதுடன், கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த சாதி ஆதிக்க வெறியுடன் நடந்து கொண்ட மாணிக்கம், பிரகாஷ் ஆகிய இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அவர்களை உடனடியாக கைது செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். சீல் வைக்கப் பட்டுள்ள கோயிலை உட னடியாக திறந்து பட்டிய லின மக்களை மாவட்ட நிர்வா கம் உரிய பாதுகாப்புடன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று வழிபட நட வடிக்கை எடுத்திடவேண் டும். இப்பகுதியில் மேலும் சாதிய மோதல்கள் ஏற்படா மல், அப்பகுதியில் நிரந்தர மான அமைதியை திரும்பக் கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய வழிகாட்டுதலின்படி நட வடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா தெரி வித்தார். கடவூர் வட்டக்குழு உறுப்பினர் கே.ராமசாமி உடனிருந்தார்.