tamilnadu

விளிம்புநிலை சமூக பெண்கள் துணிச்சலாக பேசுவது மகிழ்ச்சி

சென்னை,ஏப்.15- திருவள்ளூர் மாவட்டத் தில் திருமுல்லைவாயல் மற்றும் ஆவடியில் ஏப்ரல் 15 அன்று நடைபெற்ற நிகழ்ச்சிக ளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று 197 நரிக்குறவர் பயனாளிக ளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர் சிறுவர்கு டன் கலந்துரையாடினார். அவருடன் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொண்டார். ஆவடி பேருந்து நிலை யம் அருகில் உள்ள நரிக்குற வர் குடியிருப்புக்கு சென்றார். அங்கு பொதுமக்கள் கொடுத்த மனுக்களை மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண் ்டார். அதன் பிறகு அங்கு புதி தாக அமைக்கப்பட்ட உயர் கோபுர விளக்குகள் மற்றும்  குடிநீர் குழாயை திறந்து வைத்தார். பின்னர் நரிக்குற வர் மாணவ- மாணவிகள் எஸ்.தர்ஷினி, ஆர்.பிரியா, கே.திவ்யா ஆகியோருடன் கலந்துரையாடினார். அவர் கள் மு.க.ஸ்டாலினுக்கு புத்த கம் பரிசாக வழங்கினர்.

நிகழ்ச்சியில் முதலமைச் ்சர் மு.க.ஸ்டாலின் பேசுகை யில், நரிக்குறவர்கள், பழங் குடியின மக்கள், இதர விளிம்பு நிலையில் இருக்கும்  மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஆட்சியர் கள் சென்று,  ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் என் னென்ன தேவைப்படுகிறது என்று ஒரு பட்டியல் எடுத்து ஆய்வு செய்து, அந்த அறிக்கையை உடனடியாக எனக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டேன். அதற்கான நடவடிக்கை கள் எடுப்பதற்கு ஒரு இயக்க மாகவே நடத்தப்பட்டு கடந்த நாலைந்து மாதங்களில் நரிக்குறவர், பழங்குடியின மக்கள், இதர விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் ஒவ்வொருவருடைய குடும் பத்துக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இவ்வளவு கொடுத்த தற்கு பிறகும் இன்னும் நிச்ச யம் கொடுக்க வேண்டி இருக்கிறது. நான் இல்லை என்று மறுக்கவில்லை. மேலும் வழங்கப்படக்கூடிய நலத்திட்டங்கள் எல்லாம் வரக்கூடிய மே மாதத்துக் குள் நிச்சயமாக நிறைவேற் றப்படும் என்ற உறுதியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்படி நரிக்குறவர், பழங்குடியினர், விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு நாங்களே தேடி வந்து அந்த உதவிகளை செய்யக்கூடிய ஒரு அரசாக நம்ம அரசு அமையும். ஒவ்வொரு அடிப் படை தேவைக்கும் முன்னு ரிமை கொடுத்து நிறைவேற்றி வருகிறோம். விளிம்புநிலை சமுதா யத்தை சேர்ந்த பெண் பிள்ளைகள் இன்று துணிச்ச லாக பேசுவதை பார்த்து ஆச்சரியமாகவும், அதிசய மாகவும், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கி றது.  நமது அரசு நரிக்குற வர் மற்றும் இருளர் மக்களு டைய வாழ்வில் அணையா விளக்கை ஏற்றிடும் முயற்சி யில் ஈடுபட்டு இருக்கிறது. அதனுடைய அடையாளம் தான், அதற்கு எடுத்துக் காட்டு தான் இந்த நிகழ்ச்சி.  நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களின் பிரச்சனைக்கு தீர்வை சட்ட ரீதியாக நிச்சய மாக நிறைவேற்றி தருவோம் என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.