தீக்கதிர் சிறப்பிதழ்
மாநாட்டு கொடி நாள்
மார்ச் 23 மாவீரன் பகத்சிங் நினைவு நாள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில 23வது மாநாடு மதுரை மாநகரில் மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் எழுச்சியுடன் நடைபெற உள்ளது. பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23 அன்று மாநாட்டு கொடி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் அனைத்து கிளைகள் சார்பில் இலட்சக்கணக்கான செங்கொடிகள் உயரவுள்ளன. கொடி நாளையொட்டி மார்ச் 23 அன்று தீக்கதிர் சிறப்பிதழ் கூடுதல் பக்கங்களுடன் மலர்கிறது. கட்சியின் மாநிலத் தலைவர்களது கருத்தோவியங்கள் இடம்பெறுகின்றன. கூடுதல் பிரதி வேண்டுவோர் பொது மேலாளர்களிடம் பேசி உறுதிசெய்யவும். முழுத் தொகையையும் முன் கூட்டியே அனுப்புபவர்களுக்கு மட்டுமே கூடுதல் பிரதிகள் அனுப்பப்படும்.
முதன்மை பொது மேலாளர் விலை:ரூ.7/- கழிவு:25%
தீக்கதிர்