tamilnadu

மார்ச் 22 பால் உற்பத்தியாளர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், மார்ச் 8- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மார்ச் 22 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலக் குழு கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள சிபிஎம் அலுவல கத்தில் 5.3.2022 அன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தார். மாநில செயலாளர் என்.செல்லதுரை முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.முகமது அலி பால் உற்பத்தியாளர்களின் பிரச்சனை குறித்து பேசினார்.  இக்கூட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளாக உயர்த்தப் படாமலிருக்கும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் தினமும் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஆவின் நிறுவனம் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. '

ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவை ஒரு கோடி லிட்டராக அதிகரிக்க வேண்டும்.  தமிழக அரசு பால் விற்பனை விலையை குறைத்ததால் ஆவின் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆண்டுக்கு ரூ.270 கோடி இழப்பை ஈடுசெய்ய அந்த தொகையை தமிழக அரசு மானியமாக வழங்க வேண்டும். பால் உற்பத்தியா ளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை ஆவின் நிறுவனம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடு, நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்ய வேண்டும்.  சத்துணவு திட்டத்தில் ஆவின் பால், பால் பொருட்கள் வழங்கி பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க வேண்டும். கால்நடை தீவனங்களை 50 சதவீதம் மானிய விலை யில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 22 அன்று மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், ஆவின் அலுவலகங்கள் முன்பு பால் உற்பத்தியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.