தூர்வாரும் பணிகளை துவக்கி விரைந்து முடித்திடுக! விவசாயிகள் சங்கம் கோரிக்கை
மன்னார்குடி, மே 15- தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாக துவங்கவிருப்பதால் திருவாரூர் மாவட்ட பாய்கால் வடிகால்களை தூர்வாரும் பணிகளை உடனே துவக்கி விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட நிர்வாகத்தையும் மாநில அரசையும் கேட்டு கொண்டுள்ளது. இது பற்றி இச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, தமிழகம் முழுவதும் தூர்வாரும் பணிக ளுக்கு ரூ 500 கோடி நிதியை ஒதுக்கியிருப்பதாக தமிழக முதல மைச்சரின் அறிவிப்பு வந்துள்ளது. இதில் திருச்சி மாவட்டத் திற்கு 140 கோடி ரூபாய் எனவும், அதில் திருவாரூர் மாவட்டத்திற்கு தூர்வாரும் பணிக்காக 7 கோடியே 33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருக்கிறது. தென்மேற்கு பருவமழை மே 16 ஆம் தேதியே துவங்க விருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருப்பதால் இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதிக்கு முன்பே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளன. எனவே தூர்வாரும் பணிகளை திருவாரூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் துவங்கவும், இந்தப் பணிகளை பதிவு பெற்ற பாசனதாரர்கள் சங்கம் மூலமாக வெளிப்படைத் தன்மையோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய காலத்தில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக அரசை யும், திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலிய பெருமாள் கூறினார்.
நூறு நாள் வேலையை அனைத்து பகுதியிலும் அமல்படுத்துக!
சிபிஎம் வலியுறுத்தல்
தரங்கம்பாடி, மே 15- நூறு நாள் வேலையை மாவட்டம் முழுவதும் முழுமை யாக அனைத்து பகுதியிலும் அமலாக்குவதோடு அனைவ ருக்கும் பணி வழங்கி அரசு அறிவித்த கூலியை உடனடியாக வழங்க வேண்டும். பாசன ஆறுகள், வாய்க்கால்களை உடனடி யாக தூர்வாரிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மார்க்சிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வீ.மாரிமுத்து ஆகியோர் நாகை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மேட்டூர் அணையை உரிய நேரத்தில் திறப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ள நிலையில் தூர்வாரப்படாத பாசன ஆறுகள், வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும். வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற விவ சாய கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டுமென பல்வேறு விவசாய அமைப்புகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ள நிலையில் அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரை கடன் தொகை வசூலிப்பதை கூட்டுறவு சங்கங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். 100 நாள் வேலையை மாவட்டம் முழுவதும் முழுமையாக அமலாக்கி, அனைத்து பணியாளர்களுக்கும் பணி தந்து அரசு அறிவித்த கூலியை உடனடியாக வழங்க வேண்டும். முறை சாரா தொழிலாளர்களில் விடுபட்டவர்களுக்கும், நலவாரி யத்தில் இதுவரை பதிவு செய்யாதவர்களுக்கும் நிவாரண உதவியை வழங்க வேண்டும். மாவட்டத்தின் பல பகுதிக ளில் சில நுண்கடன் நிறுவனங்கள் கடன் தவணையை கட்டச் சொல்லி வற்புறுத்துவதாக தகவல் வருகிறது. அந்நிறுவனங் கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்த மனுவை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
முடி திருத்துநர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
தஞ்சாவூர், மே 15- ஊரடங்கு உத்தரவை அடுத்து, பாதிக்கப்பட்ட முடி திருத்துநர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முடி திருத்து நர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதிராம் பட்டினம் முடிதிருத்துநர் நலச்சங்கத் தலைவர் செல்லத்துரை கூறியது; அர சின் ஊரடங்கு உத்தரவால், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடி திருத்துனர் கடைகள் திறக்க அனு மதிக்கப்படாததால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள் ளன. இதனால், அதிராம் பட்டினத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் 100 க்கும் மேற்பட்ட முடித்திருத்துனர் குடும்பங்க ளின் அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளது. மேலும், கடை வாடகை, மின்சாரம், குடிநீர் கட்டணம் செலுத்த முடியாமலும் தவித்து வருகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட ஒவ் வொரு குடும்பங்களுக்கும் அரசு சார்பில், மளிகை சாமான் கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும்” என்றார்.