பத்திரிகைகள் வெளியிடும் செய்தி களை- அவை சரியோ, தவறோ- ஐபிசி 153ஏ பிரிவின் கீழ் அவற்றைக் குற்றமாகக் கருத முடியாது; அவ்வாறு செய்வது பேச்சுச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கத்திற்கு எதிரான பொதுநல வழக்கை மணிப்பூர் உயர்நீதிமன்றம் விசார ணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என் றும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் நேரில் ஆய்வு
பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலம், கடந்த 3 மாதங்களாக இனக் கலவரத்தால் பற்றியெரிந்து கொண்டிருக்கும் நிலையில், மணிப்பூரின் உண்மையான நிலவ ரத்தை அறிந்து கொள்வதற்காக இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் (Editors Guild of India - EGI), நேரில் ஆய்வு நடத்தியது. மூன்று பேர் கொண்ட இந்த குழுவினர், ஆகஸ்ட் 7 முதல் 10 வரை மணிப்பூரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் தெரியவந்த உண்மைகளை செப் டம்பர் 2 அன்று அறிக்கையாக வெளியிட்டது.
அரசே ஒருசார்புடன் செயல்பட்டதாக குற்றச்சாட்டு
அதில், இனக்கலவரத்தின்போது மாநில (பாஜக) அரசு ஒரு சார்பாக நடந்து கொண்டதற்கான அறிகுறிகள் தென் பட்டன, குறிப்பாக ஊடகங்கள் ஒருசார்பாக செயல் பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக் களைத் தெரிவித்திருந்தது. மணிப்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டதால் செய்திக ளை சேகரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறியிருந்தது.
ஆத்திரமடைந்த பாஜக அரசு 4 பேர் மீது வழக்கு
இதைத் தொடர்ந்து, மணிப்பூரில் மோதலை தூண்ட முயற்சிப்பதாக இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் மீது மணிப் பூர் அரசாங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளரான நங்கோம் சரத் சிங், இம்பால் கிழக்கு மாவட்டம் குரையைச் சேர்ந்த சொரோ கைபம் தௌதம் சங்கீதா ஆகியோர் மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. பாஜக அரசின் காவல்துறையும், மோதலை தூண்டும் முயற்சி, அவதூறு ஆகிய பிரிவுக ளின்கீழ், பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் தலை வர் மற்றும் அதன் மூன்று உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருந்தது.
நடவடிக்கைக்கு தடைவிதித்த உச்ச நீதிமன்றம்
இதற்கு எதிராக, இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், வழக்கை விசாரித்த தலை மை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்க’த் (EGI) தலைவர் சீமா முஸ்தபா, சஞ்சய் கபூர், சீமா குஹா, பாரத் பூஷன் ஆகிய 4 பேர் மீது செப்டம்பர் 15 வரை எந்த விதமான கட்டாய நடவ டிக்கையும் எடுக்கக் கூடாது என மணிப்பூர் பாஜக அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், வெள்ளியன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரிகை ஆசிரியர் சங்கத் திற்கு எதிராக புகார் அளித்தவர்களை நோக்கி தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சரமாரி யாக கேள்விகளை எழுப்பினார்.
என்ன நடக்கிறது.. எதன் அடிப்படையில் வழக்கு?
“எந்த விதத்தில் அவர்களின் (பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின்) அறிக்கையின் காரணமாக இந்த குற்றங்கள் (இனக்கலவரங் கள்) நடைபெற்றதாக கூறுகிறீர்கள்? இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ பிரிவின் (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கும்) கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறீர்கள்? எதன் அடிப்படையில் இதன் கீழ் வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது. இங்கு என்ன நடக்கிறது? அவர்கள் (பத்திரிகை ஆசிரியர் சங்கம்) தங்கள் கருத்துக் களை முன்வைக்க உரிமை உண்டு. இது ஒரு அறிக்கை மட்டுமே. அப்படியிருக்க எதன் அடிப்ப டையில் அவர்கள் மீது இந்த குற்றத்தை சுமத்தி இருக்கிறீர்கள்? என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி னார்.
கருத்துக்களை வெளியிட பேச்சுரிமை உண்டு
மேலும், “புகார்களில் அவர்கள் (பத்தி ரிகை ஆசிரியர் சங்கம்) மீது கூறப் படும் குற்றங்களில் ஒரு சிறு உண்மை கூட கிடை யாது” என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி “மணிப் பூர் வன்முறை தொடர்பாக, இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் (EGI) வெளியிட்ட அறிக்கை சரி யாக இருக்கலாம். தவறாக இருக்கலாம். ஆனால், அது அதன் கருத்துக்களை வெளியிடுவதற்கு பேச்சுரிமை உண்டு” என்றும் தெரிவித்தார்.