அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி
மண்டைக்காடு/நாகர்கோவில், பிப்.21- மண்டைக்காடு கோவில் விவ காரம் சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மண்டைக்காட்டில் செய்தியாளர்களி டம் தெரிவித்தார். தமிழ்நாடு இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு செவ்வாயன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்திருந்தார். பின்னர் அவர் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வேளி மலை குமார கோவில் முருகன் ஆலயங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார். மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அவர், சமய மாநாடு நடைபெறும் இடத் தையும் பார்வையிட்டார்.
அப்போது அதிகாரிகளிடம் மாநாடு நடைபெறு மிடம் யாருக்குச் சொந்தமானது எனக் கேட்டார். அதற்கு அதிகாரிகள், மாநாடு நடைபெறுமிடம் அறநிலையத்துறைக் குச் சொந்தமானது எனக் கூறி அதற் கான ஆவணங்களையும் சமர்ப்பித்தனர். பின்னர் வேளிமலை குமாரக் கோவில் முருகன் கோவிலில் புனர மைப்புப் பணிகளை ஆய்வு செய்த அவர், ரூ.1 கோடியே 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இங்கு ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை இங்கு திருவிழா நடைபெறுகிறது. பின்னர் நாகர்கோவில் செய்தியா ளர்களிடம் பேசிய சேகர் பாபு, “மண் டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழா நிகழ்ச்சி மார்ச் 5 ஆம் தேதி தான் நடக்கிறது. அதற்கு இன்னும் 15 நாட்கள் இருக்கிறது. தற்போது அங்கு எழுந்துள்ள பிரச்சனை குறித்து, சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பேசி வருகின்றனர். இந்த விவகாரம் சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை துறை அமைச்சர் என்ற முறையில் எனக்கு புலப்படுகிறது. அரசை பொறுத்தவரை பிரச்சனையை பெரி தாக்க விரும்பாது. அனைத்து மக்க ளும் சாதி,சமுதாய வேறுபாடின்றி திருவிழாவில் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இது வரை ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு வேட்டை தொடரும். என்றார். முன்னதாக அமைச்சர், பாஜக நிர்வாகி பொன்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட இந்து அமைப்பினருடன் பேசினார்.