மதுரையில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமிக்கு இதே பகுதியை சேர்ந்த பாண்டி (வயது 40) என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 40 வயதான பாண்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.