tamilnadu

குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தூத்துக்குடி,பிப்.26- பெரியார் வேடமிட்ட குழந்தைக்கு ஃபேஸ்பு க்கில் கொலை மிரட்டல் விடுத்த வரை கயத்தாறு காவல்துறையினர் கைது  செய்தனர். தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும்  குழந்தைகள் பங்கேற்கும் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’தந்தை பெரியாரின் கருத்துகளை அவரைப்போலவே வேடமிட்டு நடித்துக் காட்டியிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மூலம் வெளிவந்த பெரியாரின் கருத்துகள் அனைத்தும் சமூக வலைதளங்கள் வாயி லாக லட்சக்கணக்கான மக்களை சென்ற டைந்தது. இதனையடுத்து அந்த சிறார்கள்  அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பாராட்டுகளையும் பெற்றிருந்தார் கள். இந்த நிலையில், கோவில்பட்டி அருகே உள்ள காயத்தாரைச் சேர்ந்த வெங்க டேஷ்குமார் பாபு சமூக வலைதளத்தில் பொது மக்களின் அமைதியை குலைக் கும் வகையிலும், நிகழ்ச்சியில் பங்கேற் றிருந்த குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பதிவிட்டி ருந்தார். அவரை கயத்தாறு காவல்துறை யினர் கைது செய்துள்ளனர்.