மாமேதை காரல் மார்க்ஸ் 205 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற மாபெரும் சிவப்புப் பேரணியை மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். வெள்ளியன்று பேகம்பூரில் உள்ள ஏ.பி.சிலை முன்பிருந்து புறப்பட்ட பேரணியை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், சு.வெங்கடேசன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், நகரச்செயலாளர் ஏ.அரபுமுகமது, ஒன்றியச்செயலாளர் சரத்குமார் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்து கொண்டனர். முன்னதாக கேரள மாநிலம் பீர்மேடு பேண்ட் வாத்தியம் மற்றும் செந்தொண்டர் அணிவகுப்பும் நடைபெற்றது. சிவப்பு நிற பலூன்களோடு சிறுவர் சிறுமியர்கள் பங்கேற்றனர். பேரணி நிறைவு நிகழ்ச்சியாக மணிக்கூண்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
படங்கள் : துருவன் போட்டோகிராபி