tamilnadu

img

ரூ. 25 லட்சம் பெற்றதாக சிபிஎம் மீது அவதூறு; மன்னிப்பு கோரியது மலையாள மனோரமா!

ரூ. 25 லட்சம் பெற்றதாக சிபிஎம் மீது அவதூறு; மன்னிப்பு கோரியது மலையாள மனோரமா!

திருவனந்தபுரம், மே 28 -    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்பியதற்காக மலையாள மனோரமா பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளது.  மெகா இன்ஜினியரிங் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலமாக 25 லட்சம் ரூபாய் பெற்றதாக மலையாள முதலாளித்துவ ஊடகமான ‘மலையாள மனோரமா’ செய்தி நிறுவனம் ஆதார மற்ற செய்தியை 2025 மே 24 அன்று வெளியிட்டது.  இந்த செய்தி அவதூறு பரப்பும் நட வடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு கடுமையான கண்டனம் தெரிவித்தது.  மேலும், கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் மாஸ்டர் சார்பில் வழக்கறிஞர் கே.எஸ். அருண் குமார், ‘மலையாள மனோரமா’வின் தலைமை ஆசிரியர் / மேலாண்மை ஆசிரி யர் ஆகியோருக்கு சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பினார்.  அந்த நோட்டீசில், “மெகா இன்ஜினி யரிங் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து சிபிஐ(எம்) தேர்தல் பத்திரங்கள் மூலமாக 25 லட்சம் ரூபாய் பெற்றதாக ஆதாரமற்ற, அவதூறு பரப்பும் வகையிலான பொய்ச் செய்தி உங்கள் செய்தி தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.   தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக போராடிய ஒரே அரசியல் கட்சி சிபிஐ(எம்) தான், தேர்தல் பத்திரங்கள் மூலமாக எந்த ஒரு நன்கொடையையும் சிபிஐ(எம்) பெறவில்லை என உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உண்மை உங்கள் நிறுவனம் உட்பட அனைவரும் அறிந்ததே.   சிபிஐ(எம்) ஒருபோதும் தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலம் நன்கொடை உதவி பெற்றதில்லை என்பதை ‘ஸ்டேட்  பேங்க் ஆப் இந்தியா (SBI)’ வெளி யிட்ட அதிகாரப்பூர்வ தரவுகள் உறுதிப் படுத்துகின்றன. இந்தத் தரவு, ‘தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்புக்கு முரணானது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு வெளியிடப்பட்டது.  சிபிஐ(எம்) மக்களின் உரிமைகளை தீவிரமாக பாதுகாத்து வருகின்ற இந்த நேரத்தில், ‘மலையாள மனோரமா’ வெளி யிட்ட இந்த பொய் செய்திகள் எங்கள் கட்சியின் நன்மதிப்பை சிதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட முயற்சியாக தெரிகிறது. இதுபோன்ற அவதூறுகளை பொறுத்துக் கொள்ள முடியாது. நேர்மையை பாதுகாக்க அனைத்து சட்ட  நடவடிக்கைகளையும் கட்சி மேற்கொள்ளும். மான நஷ்ட வழக்கு தொடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘மலையாள மனோரமா’ செய்தி நிறுவனம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்பியதற்கு மன்னிப்பு கோரியுள்ளது.