மும்பை, ஜன. 4 - மோடியின் கூட்டுக் களவாணி களில் ஒருவரும் தேசத்தின் வளங்களை யெல்லாம் வாரிச் சுருட்டி விழுங்கத் துடிக்கும் பகாசுர கார்ப்பரேட் முதலாளியு மான அதானியின் லாபவெறிக்கு எதிராக நேரடி யுத்தத்தை துவக்கியுள்ளது மகாராஷ்டிர தொழிலாளி வர்க்கம். அதானி மின் நிறுவனத்திற்கு, மின் விநியோக உரிமம் வழங்கக்கூடாது என்ற முழக்கத்துடன் 72 மணி நேர வேலைநிறுத்தத்தை ஜனவரி 4 நள்ளி ரவில் துவக்கியுள்ளனர் மகாராஷ்டிர மாநில மின்வாரியத்தின் 86 ஆயிரம் ஊழியர்கள். இந்தப் பெரும் போராட்டத்திற்கு இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது. மின் ஊழியர்களின் கடும் எதிர்ப்பி னைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, உட னடியாக அதானிக்கு உரிமம் வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிர மாநில சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) - பாஜக கூட்டணி அரசின் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் எள மரம் கரீம் கடிதம் மூலம் வற்புறுத்தி யுள்ளார்.
மகாராஷ்டிர மாநில அரசின் மின்வாரி யத்தின் கீழ் மாநில மின்விநியோக கம்பெனி லிமிடெட், மின்சார உற்பத்தி கம்பெனி லிமிடெட் மற்றும் மாநில மின் தொகுப்பு கம்பெனி லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஒட்டுமொத்தமாக 86 ஆயிரம் ஊழி யர்கள் மற்றும் பொறியாளர்கள் பணி யாற்றுகின்றனர். சிஐடியு உள்பட 34 சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த ஒட்டுமொத்த சங்கங்களும் கூட்டமைப் பாக அணிதிரண்டு, மகாராஷ்டிர மின்வாரியத்தை விழுங்கத் துடிக்கும் அதானி எலக்ட்ரிசிட்டி நவி மும்பை லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக போர்க்குரலை எழுப்பியுள்ளனர். தொழி ற்சங்க பேதமின்றி, அரசியல் பேத மின்றி தொழிலாளர் வர்க்கம், பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராக ஓரணியில் திரண்டு வேலை நிறுத்தத்தைத் துவக்கியிருப்பது, இந்தியாவில் பெரும் முதலாளிகள் - ஆட்சியாளர்கள் எனும் கள்ளக் கூட்டின் பெரும் சூரையாடலுக்கு எதிரான மாபெரும் போராட்டமாகும். மகாராஷ்டிர மாநில சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) - பாஜக கூட்டணி அரசானது, தற்சமயம் நவி மும்பை யில் உள்ள பந்தப் எனும் மின் வட்டத்தின் மின்விநியோகத்தை அதானி எலக்ட்ரிசிட்டி நிறுவனம் மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் அதானி டிரான்ஸ்மிசன் லிமிடெட் எனும் அதானியின் மிகப்பெரும் மின்தொகுப்பு மற்றும் பரிமாற்ற நிறு வனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும். முதற்கட்டமாக பந்தப் மின் வட்டத்திற்கான விநியோக உரிமையை பெற்றுள்ள அதானி எலக்ட்ரிசிட்டி லிமிடெட், தொடர்ச்சியாக மகாராஷ்டிரா வின் முலந்த், தானே, நவி மும்பை, பன்வெல், கார்கர், தலோஜா மற்றும் உரான் ஆகிய மின்சார வட்டங்களில் மின்விநியோகம் செய்வதற்கான உரிமம் கேட்டு மகாராஷ்டிரா மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் விண்ணப்பித்துள் ளது. மேற்கண்ட மின் வட்டங்கள், மகாராஷ்டிர மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்வாரிய வருவாயில் 50 சதவீதத்தை ஈட்டுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி நிறுவனத்துடன் டொரண்ட் பவர் நிறுவனமும், டாடா பவர் நிறு வனமும் மகாராஷ்டிராவின் வேறு சில மின்விநியோக வட்டங்களுக்கான உரிமங்களை பெறுவதற்காக விண்ணப் பித்துள்ளன. ஒட்டுமொத்தமாக 2.8 கோடி மின் பயனீட்டாளர்களைக் கொண்டு ள்ள மகாராஷ்டிர மின்வாரியத்தையே பிரதானமாக அதானி நிறுவனத்திடமும் சில வட்டங்களை டாடா மற்றும் டொ ரண்ட் ஆகிய தனியார் நிறுவனங்களிட மும் தாரை வார்ப்பது என மகாராஷ்டிரா வின் ஏக்நாத் ஷிண்டே அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக மகாராஷ்டிர மின்வாரிய ஊழியர்கள் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்ற னர். நாக்பூரில் அமைந்துள்ள மகா ராஷ்டிராவின் மற்றொரு சட்டமன்ற கட்டி டம் முன்பு 35ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட போராட்டம் சமீபத்தில் நடைபெற்றது. புத்தாண்டு பிறந்த உடனே ஜனவரி 2 அன்று தானே மாகாணத்தில் 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் பங்கேற்ற பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எந்த வகையிலும் அதானி குழுமம் மகாராஷ்டிர மின்வாரியத்தில் காலடி வைக்கக்கூடாது என்பதே இந்தப் பேரெழுச்சியின் ஒற்றை முழக்கமாகும். மகாராஷ்டிர அரசு தனது முடிவை திரும்பப்பெற வேண்டும் என வலி யுறுத்தி ஜனவரி 4 நள்ளிரவில் துவங்கி 72 மணி நேரம் மின் ஊழியர்கள் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலைநிறுத்தம் அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரி கிறது.
ஏற்கெனவே அமலில் உள்ள மின்சாரச் சட்டம் 2003ன் பிரிவு 14ன்கீழ் இடம்பெற்றுள்ள விதியின் அடிப்படை யில் மகாராஷ்டிராவின் பிரதான மின்விநியோக வட்டத்தின் உரிமத்தை அதானி நிறுவனத்திடம் அளிப்பதாக, ஏக்நாத் ஷிண்டே அரசு தனது முடிவுக்கு நியாயம் கற்பித்துள்ளது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிற மின் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் எனவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. ஷிண்டே அரசின் இந்த எதேச்சதி காரத்தை சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் வன்மையாகக் கண்டித்துள் ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒன்றிய மோடி அரசு நிறைவேற்றத் துடிக்கிற புதிய மின்சார திருத்த சட்ட மசோதா 2022, இந்திய மின்சாரத் துறை யை முழுக்க முழுக்க அதானி உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப் பதற்கு வழி செய்கிறது என்பதை, மகாராஷ்டிர அரசின் நடவடிக்கை உண ர்த்துகிறது என சுட்டிக்காட்டியுள்ளார். மகாராஷ்டிரம் உள்பட நாடு முழு வதும் உள்ள பொதுத்துறை மின்வாரி யங்களை தனியார் பெரும் கார்ப்ப ரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் ஒன்றிய - மாநில அரசுகளின் இத்தகைய நட வடிக்கைகளுக்கு எதிராக ஒன்று பட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகாராஷ்டிரா மின் ஊழியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள், மகாராஷ்டிர மின் ஊழியர்களின் அந்த மகத்தான போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எளமரம் கரீம் கடிதம்
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ள சிபிஎம் நாடாளுமன்ற தலைவர் எளமரம் கரீம், மாநில மின்துறை யையும் நுகர்வோரையும் பாதுகாக் கும் பொருட்டு, மின்விநியோகத்தை தனி யாருக்கு தரும் நடவடிக்கையிலிருந்து உடனடியாக பின்வாங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.