மதுரை,ஆக.27-
மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்தின் பின்னணியில் சதித் திட்டம் எதுவுமில்லை; விரைவில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணி களுக்கான ரயில் பெட்டியில் ஞாயி றன்று தீ விபத்து நிகழ்ந்து உத்தரப்பிர தேச மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் பலி யாகினர். இதுதொடர்பாக அதிகாரிகள் குழு தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றது.தடையை மீறி சிலிண்டரை ரயிலில் எடுத்துச்சென்று சமையல் செய்ததால் தீ விபத்து ஏற் பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரண்டாவது நாளான ஞாயிற் றுக்கிழமையன்று காவல்துறையின் தடயவியல் குழுவினர் உள்ளிட்ட அதி காரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பாதி எரிந்த நிலையில் பணத்தை பறி முதல் செய்துள்ளனர். ரூ.200 கட்டுகள், ரூ.500 கட்டுகள் அடங்கிய பணம் பறி முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வி.எம். சவுத்ரி ஞாயிறன்று மதுரைக்கு வந்து, விபத்துக்குள்ளான ரயில் பெட்டியைப் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண் டார். விபத்தில் காயமடைந்து மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ரயில் பெட்டி யில் தீ விபத்தின்போது, தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேரை ரயில்வே பாதுகாப்பு படை யினர் பிடித்துள்ளனர். அவர்களிடமும் பாதுகாப்பு ஆணையர் விசாரித்தார். பிறகு கோட்ட ரயில்வே மேலாளர் ப. அனந்த் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தீ விபத்துக்கான காரணம் குறித்து விவ ரங்களை கேட்டறிந்தார். முன்னதாக, சிகிச்சையில் இருந்த 7 பயணிகளிடம் பாதுகாப்பு ஆணையர் விசாரணை முடித்த நிலையில், 7 பேரும் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல் லப்பட்டனர். அவர்களோடு சேர்த்து 28 பேர் மதுரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து லக்னோவிற்கு புறப்பட்டு சென்றனர்.
இதன்பின்னர் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செய்தியாளர்களிடம் கூறு கையில், “மதுரையில் நடந்த ரயில் பெட்டி தீ விபத்து குறித்து உரிய விசா ரணை முறையாக நடக்கிறது. விரை வில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியவர்கள் மீது என்ன மாதிரி யான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிவில் தெரியவரும். சம்பவம் தொடர்பாக சம் பந்தப்பட்டோர் மீது காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுப்பர்.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை யில் உள்ளவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டி இருப்பதால் அவர்களிடம் விரைவாக விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளோம். சுற்றுலா ரயில் பெட்டிகள், பயணி களுக்கான ரயில் பெட்டிகள் இனிவரும் காலங்களில் இதுபோல் விபத்து நடக்கா மல் இருக்க, உரிய விதிமுறைகள் கடு மையாக வகுக்கப்படும். இவ்விபத்து தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சதித் திட்டம் எதுவு மில்லை என தெரியவந்துள்ளது. இருப் பினும், தொடர்ந்து விசாரணை மேற் கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.