tamilnadu

img

மாணவத் தியாகிகள் சோமு- செம்பு நினைவு நாள்

மதுரை தியாகராஜர் பொறி யியல் கல்லூரி உணவு விடுதி சரியாகச் செயல்படுவ தற்காகவும், உணவு விடுதிக் கட்ட ணம் உயர்த்தப் படுவதைத் தடுப்ப தற்காகவும் விடுதியில் பரிமாறப் படும் உணவு தரமானதாக இருப்ப தற்காகவும், விடுதியில் மாணவர்களுக்கு உரிய வசதிகள் பெறுவதற்கா கவும் நடந்த பல்வேறு போராட்டங்களில் முன்னணி வகித்து மாண வர்களை ஒன்று திரட்டியதில் மாணவத் தலைவர்கள் சோமசுந்த ரத்திற்கும் செம்புலிங்கத்திற்கும் முக்கியப் பங்குண்டு. அதேபோல் கல்லூரிக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படும் போதெல்லாம் அதை எதிர்த்து நடந்த போராட்டங்களிலும் அவர்கள் முன்னிலை வகித்தனர். இதனால் மாணவர்களின் அன்பையும் நன்மதிப்பையும் இருவரும் பெற்றிருந்தனர். 1980ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் செம்புலிங்கம் மாணவர் பேரவைச் செயலாளராகத் தேர்ந்தெ டுக்கப்பட்டார். இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளராக சோமசுந்தரம் அவருக்கு வழிகாட்டினார். சாதி ஆதிக்க சக்தியினரால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு அவர்களுடைய செல்வாக்கு வளர்ந்தது. இந்தியாவின் சாபக்கேடான சாதிவெறி அவர்கள் மீது பாய்ந்தது. மாணவர்களின் ஆதரவோடு செல்வாக்குப் பெற முடியாத சாதி வெறியர்கள் கூலிப் படையினருடன் இணைந்து சோமசுந்தரத்தையும் செம்புலிங்கத்தையும் தாக்கினர். 1981 மார்ச் 31 அன்று சோமுவும் செம்புவும் கொல்லப்பட்டனர். “சாவைக் கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை. ஏனெனில், இறப்பில் நாங்கள் இறப்பதில்லை” என்ற அறைகூவலே சோமு - செம்பு போன்ற தியாகிகள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம். சோமுவும் செம்புவும் உயர்த்திப் பிடித்த “சுதந்திரம் ஜனநாயகம் சோஷலிசம்” என்று பொறிக்கப்பட்ட வெண்கொடியை கம்பீரமாக உயர்த்திப் பிடித்து சாதி மத இன பாலின வேறுபாடற்ற சமுதா யத்தைப் படைக்க  அணிதிரள்வதே சோமு செம்புவிற்கு செலுத்தும் நினைவஞ்சலியாகும்.