tamilnadu

img

80 பதக்கங்கள் பெற்ற மதுரை மாணவி

மதுரை, ஜூலை 23-  மதுரை மாவட்ட அளவில், தமிழக அளவில், தேச அளவில் பெற்ற சுமார் 80 பதக்கங்களை கழுத்தில் அணிந்திருக்கும் மாணவி ஒருவர் அர்ஜெண்டினா செல்வதற்கு வழியில்லாமல் தவித்து வருகிறார். மதுரை திருப்பாலையில் உள்ள மதுரை பப்ளிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஸாகினி. இவரது தந்தை நாக ராஜன் பொறியாளராக உள்ளார். தாயார் கனகவள்ளி.

ஸாகினி  ஸ்போர்ட்ஸ் பெடரே ஷன் சார்பில் நடத்தப்படும் ரோலர்டெர்பி (ஸ்கேட்டிங் விளையாட்டில் ஒரு வகை) விளை யாட்டில் தேசிய அளவில், மாநில அளவில், மதுரை மாவட்ட அளவில் 80 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.  இந்த விளையாட்டிற்கு இது வரை அரசு அங்கீகாரம் அளிக்க வில்லை. எனவே ஸாகினி குடும்பத் தினர் தங்களது சொந்தப் பணத்தைச் செலவழித்து மகளை நாடு முழு வதும் நடைபெறும் போட்டிகளு க்கு அழைத்துச் செல்கின்றனர். ஒவ்வொரு மாதமும் விளையாட் டிற்காக குறைந்தது ரூ.20 ஆயி ரம் செலவழித்து வருகின்றனர். புனேவில் நடைபெறும் போட்டி யில் பங்கேற்று வந்த வகையில் ரூ.40 ஆயிரத்தை குடும்பத்தினர் செலவழித்துள்ளனர். ஆக.3-ஆம் தேதி தலை நகர் புதுதில்லி அருகில் உள்ள நொய்டாவில் பங்கேற்கும் போட்டியில் இவர் பங்கேற்று திரும்புவதற்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவாகும் என்கிறார் ஸாகினி.அரசின் உதவி யில்லாமல் இதுவரை சமாளித்து வந்துள்ளனர் இவரது குடும்பத்தி னர்.

இந்த நிலையில் அர்ஜெண்டி னா நாட்டில் வரும் அக்டோபர் 24 முதல் நவம்பர் 13 வரை நடை பெறவுள்ள World State Games 2020-2022-இல் கலந்து கொள்ள ஸாகினி தேர்வு செய்யப்பட்டுள் ளார். இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வீரர்களில் ஸாகினியும் ஒருவர். ஸாகினி அர்ஜெண்டினா சென்று திரும்ப ரூ.2.75 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை இவர் நழுவவிட்டால் இவருடைய வாய்ப்பை ஸ்போர்ட்ஸ் பெடரேஷன்  வேறொ ருவருக்கு  வழங்கிவிடும். ஸாகினி அக்டோபர் 29-ஆம் தேதி மதுரை யிலிருந்து புறப்பட வேண்டும். அர்ஜெண்டினா எப்படி செல்வது  எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தனக்கு  உதவி வேண்டி மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அலு வலகத்தில் மனு அளித்துள்ளார். அவர் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டி ருப்பதால் மனுவை அவரது அலுவ லக ஊழியர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

அத்துடன் தமிழக நிதிய மைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனையும் மாணவி ஸாகினி சனிக்கிழமை சந்தித்து மனு அளித்துள்ளார். அவர் அர்ஜெண்டினா செல்ல உதவு வதாகக் கூறியுள்ளார். மேலும் மதுரை ஆட்சியர் அனீஷ்சேகரையும் சந்தித்து தனக்கு உதவுமாறு ஸாகினி கேட்டுக்கொண்டுள்ளார். அவரு டைய நடவடிக்கைக்காக காத்தி ருக்கிறார். விளையாட்டு வீரர்க ளை ஊக்குவிக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஸாகினியை நிச்சயம் கைவிடாது என நம்பலாம்.

படம்: ஜெ.பொன்மாறன்