tamilnadu

மாநில மாநாட்டு பொதுக் கூட்டத்திற்கு வரும் செந்தொண்டர் அல்லாத வாகனங்கள்

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு செந்தொண்டர் அணிவகுப்பு மார்ச் 30, புதன்கிழமை மாலை 4 மணியளவில் காளவாசலில் இருந்து புறப்படுகிறது. மாநாட்டுப் பொதுக்கூட்டம் பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் நடைபெறுகிறது.

1.     கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, கருர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய  மாவட்டத்தில் இருந்து பொதுக் கூட்டத்திற்கு வரும் வாகனங்கள் பொதுக் கூட்டத் திடலில் இறக்கி
விட்டு பின்பு பைபாஸ் ரோட்டில் நேராக வந்து அரவிந்த் மீரா பள்ளி, ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பாகவும் பாலத்தில் கிழக்கு பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட் அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.

2. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலிருந்து திருப்பரங் குன்றம் வழியாக வரும் வாகனங்கள்  பொதுக் கூட்டத் திடலில் இறக்கிவிட்டு பின்பு பழங்காநத்தம் டி.வி.எஸ்.நகர் பாலம் அல்லது பழங்காநத்தம் பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைக்க  வேண்டும்.

3. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, சென்னை மாநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், இராணிபேட்டை, கள்ளக்குறிஞ்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய  மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மதுரை கல்லூரி வழியாக வந்து பழங்காநத்தம் சந்திப்பில் இறக்கி விட்டு டி.வி.எஸ். நகர் பாலம் / பழங்காநத்தம் பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும் அல்லது பெரியார் பேருந்து நிலையம்,எல்லீஸ்நகர் பாலம் வழியாக 80 அடி ரோட்டில் பைபாஸ் ரோடு வழியாக வந்து  பொதுக் கூட்டத்திடலில் இறக்கி விட்டு, வாகனங்களை அரவிந்த்மீரா பள்ளி, நேரு நகர் பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
  

 செந்தொண்டர் பேரணிக்கு வரும் வாகனங்கள் பேரணி துவங்குமிடமான மதுரை காளவாசலில் செந்தொண்டர்களை இறக்கி விட்டு பொதுக்கூட்டத் திற்கு வரும் வாகனங்களை நிறுத்தச் சொல்லியிருக்கும் இடத்திற்குச் சென்று தங்களது வாகனங் களை நிறுத்த வேண்டும்.