மதுரை அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 33வது நாளாக காத்திருப்பு போராட்டம்
மதுரை, செப்.19- அரசு போக்குவரத்து மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்கு வரத்து தலைமையகம் முன்பு 33வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. சிஐடியு அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் ஓய்வு பெற் றோர் நல அமைப்பு, அரசு விரைவு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஆகியவை இணைந்து இந்த போராட் டத்தை நடத்தி வருகின்றன. போராட்டத்தில் சிஐடியு டி.குமார் தலை மையிலான தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஓய்வுபெற்றோர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொழிலாளர்கள் கோரிக்கைகளை ஆதரித்து உண்டியல் மூலம் நிதி திரட்டினர்.