tamilnadu

img

தீண்டாமையில் மதுரை மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் நிலவி வரும் தீண்டாமை கொடுமையில் மதுரை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொடுக்கப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. 
தமிழகத்தில் நிலவி வரும் தீண்டாமை குறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் தகவல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதில் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கடந்த ஆண்டு இறுதிவரை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி, தமிழகத்தில் தீண்டாமை பாகுபாடு கடைபிடிக்கப்படும் கிராமங்களின் எண்ணிக்கை 445 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டத்தில் 43 இடங்களிலும், அதற்கு அடுத்தப்படியாக விழுப்புரம் மாவட்டத்தில் 25 இடங்களிலும், நெல்லை மாவட்டத்தில் 24 இடங்களிலும் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் நடப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே ஒரு கிராமத்துடன், சென்னை இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வழியே தெரியவந்துள்ளது.