tamilnadu

img

இன்று மதுரை மேயர், துணை மேயர் தேர்தல்- பதவியேற்பு விழா

மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளரராக மேலப்பொன்னகரம் 57 ஆவது வார்டில் வெற்றி பெற்ற திமுகவின் இந்திராணி பொன்வசந்த்தை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.  துணை மேயர் பதவி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. துணைமேயர் வேட்பாளராக 80 ஆவது வார்டில் வெற்றி பெற்ற அக்கட்சியின் கவுன்சிலர் டி.நாகராஜனை கட்சியின் மாநிலச் செயலாளர் அறிவித்துள்ளார்.

மதுரை, மார்ச் 3-  மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் மற்றும் பதவி யேற்பு விழா இன்று (மார்ச் 4) நடை பெறுகிறது.  மதுரை மாநகராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 100 மாமன்ற உறுப்பினர்கள் மார்ச் 2 அன்று பதவி யேற்றுக் கொண்டனர். தமிழ்நாடு தேர் தல் ஆணைய உத்தரவின்படி மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை மாமன்ற கூட்ட அரங்கமான பெரியார் அரங்கில் மார்ச் 4 அன்று  காலை 9.30 மணிக்கு மேயர் தேர்த லும், மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் தேர்தலும் தேர்தல் நடத்தும் அலுவலரான மதுரை மாநக ராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற உள்ளது. தேர்ந்தெடுக்கப் படும் மேயர் மற்றும் துணை மேயர் பதவியேற்பு விழாவும் அந்தந்த வேளைகளிலேயே நடைபெற உள்ளது.  மேயர் (பெண்கள்-பொது) தேர்தல் மார்ச் 4 காலை 9.30 மணிக்கும் துணை மேயர்     (பொது) தேர்தல் மதியம் 2.30 மணிக்கும் நடைபெறுகிறது. மாமன்ற கூட்டம் துவங்கிய வுடன் கூட்டத்தின்போது இத்தேர் தல்களுக்கான வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர் மாநக ராட்சி ஆணையாளரிடம் படிவம் 28ல் தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்தல் நடைமுறை நிறைவுற்றவுடன் காலை யில் மேயர் பதவியேற்பு மற்றும் மதி யம் துணை மேயர் பதவியேற்பு நிகழ்வு கள் மாமன்ற கூடத்தில் நடைபெறும். பதவியேற்பு விழா அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள எல்.இ.டி. திரையில் நேரலை செய்யப்படும்.  இத்தேர்தல் தொடர்பாக தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையம் பின் வரும் வழிகாட்டுதல்களை வழங்கி யுள்ளது.  தேர்தல் நடைபெறும் வேளை களில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் பணி அலுவலர்கள் மட்டுமே மாமன்ற அரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும். வேறு நபர்கள் யாரையும் அனுமதிக்ககூடாது. மாமன்ற உறுப்பி னர்கள் காலை 9.30 மணிக்கு முன்ன தாகவும், மதியம் 2.30 மணிக்கு முன்ன தாகவும் மாமன்ற அரங்கிற்குள் வருகை தந்திட வேண்டும். தேர்தல் நடைமுறைகள் முழுமையாக சி.சி.டி.வி மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அரங்கிற் குள் தேர்தல் நடத்தும் அலுவலரை தவிர்த்து வேறு யாரும் கைபேசி எடுத்துச் செல்ல அனுமதியில்லை. மாமன்ற அரங்கிற்கு வரும் உறுப்பி னர்கள் பேனா உள்ளிட்ட உபகர ணங்கள் எதையும் எடுத்துவர அனு மதியில்லை. போதிய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மேற்கண்ட தமிழ்நாடு தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை பின்பற்றி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலுவலர்-மாநக ராட்சி ஆணையாளர் தெரிவித்துள் ளார்.