tamilnadu

தன்னார்வலருக்கு மதுரை ஆணையர் பாராட்டு

மதுரை:
மதுரை டி.வி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணன்- கீதா தம்பதியரின் இவர்கள்து மகள் அபராஜிதா (18) அபராஜிதா எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.இது குறித்து அவரது பெற்றோர் கண்ணன்-கீதாதம்பதியினர் கூறியதாவது:-கொரோனா தடுப்புப் பணி தன்னார்வலரான எனது மகளுக்கு மதுரை மாநகராட்சி ஊக்கமளித்துவருகிறது. ஆணையாளர் விசாகன் மாநகராட்சி சார்பில் கபசுர பொடி, தண்ணீர்,  எரிவாயுஉருளைகளை வழங்கினார்.  எங்களது குடும்பத்தினரின் கூட்டு முயற்சியால்  தினசரி  இரண்டாயிரம்   லிட்டர்கபசுர குடிநீர் தயாரித்து வழங்குகிறோம். கபரசுர குடிநீரை மாநகராட்சி களப்பணியாளர்கள் வாங்கிச் சென்று விநியோகிக்கிறார்கள். 115 நாட்களாக இப்பணியை செய்துவருகிறோம். கொரோனா முற்றாக ஒழியும் வரை எனது மகளின் முயற்சிக்கு நானும் எங்களது குடும்ப உறுப்பினர்களும் துணையாக இருப்போம். வீட்டிலும் கபசுரகுடிநீர் வைத் துள்ளோம். தினசரி 150 லிட்டர் குடிநீரை மக்கள் பருகிச் செல்கின்றனர்.
ஜெய்ஹிந்த்புரம், அக்ரினி அடுக்குமாடி குடியிருப்பு உட்பட 25 இடங்களில் கப சுர குடிநீர் மையம்திறக்க இருக்கிறோம். மாநகராட்சி  100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நோய் எதிர்ப்பு மருந்துப் பெட்டகத்தை வாங்கி  ரூ.1.50 லட்சத்திற்கு வாங்கி மக்களுக்கு விநியோகித்துள்ளோம் . அபராஜிதாவின் பணியை அமைச்சர் வேலுமணி, மாநகராட்சி ஆணையாளர் விசாகன் பாராட்டியுள்ளனர். இவரது சேவை வலைதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.