tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு

சென்னை, மே 29- சென்னை உயர்நீதிமன்றத்தின் 33 ஆவது தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா ஞாயிறன்று (மே 29) பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதி பதியாக இருந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். இதனை அடுத்து மூத்த நீதிபதி எம்.துரைச்சாமி, நீதிபதி டி.ராஜா ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர். கடந்த 8 மாதங்களாக தலைமை நீதிபதி  பணியிடம் நிரப்பப்படமால் இருந்து வந்த நிலையில், உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்கா பூர்வாலாவை, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு ஒன்றிய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், எஸ்.வி.கங்கா பூர்வாலாவை தலைமை நீதிபதியாக நிய மித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்த நிலையில், சென்னை கிண்டி யிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஞாயிறன்று (மே 28) நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை  உயர்நீதிமன்றத்தின் 33 ஆவது தலைமை  நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா பதவி யேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதா பதவியேற்றிருக்கும் கங்கா பூர்வாலா அடுத்தாண்டு மே 23 ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார்.