பணிப் பதிவேடு கோரி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, மே 29- திருச்சி புறநகர் மாவட்டம் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில், வியாழனன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்சம் ஊதியம் ரூ20 ஆயிரம் வழங்க வேண்டும். மருங்காபுரி ஒன்றியத்தில் பணிபுரியும் உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு உடனடியாக பணி பதிவேடு செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ராமசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம், மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் தியாகராஜன், சிஐடியு ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி, உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கச் செயலாளர் துரைபாண்டியன் சங்கப் பொருளாளர் கருமன் ஆகியோர் பேசினர். நிர்வாக கமிட்டி உறுப்பினர் அருள்மொழி நன்றி கூறினார். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்து பேசப்பட்டது, உடனடியாக செய்து தருவதாக உறுதியளித்தார்.