tamilnadu

img

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு  கடனுதவி வழங்கும் விழா

திருவாரூர், ஜூன் 11 - மகளிர் சுயஉதவிக்குழு விழாவை யொட்டி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கலைவா ணர் அரங்கில் காணொலி வாயிலாக அனைத்து மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கி கடன் உதவி களை வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட  ஆட்சியரக கூட்டரங்கில் மகளிர் சுய உதவிக்  குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில், 1163 குழுக்களில் உள்ள 13,348 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் ரூ.87 கோடியே 67 இலட்சத்து 4 ஆயிரம் கடன்  உதவிகளை மாவட்ட ஆட்சியர் வ.மோகனச் சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பொன்னம்பலம், திருவாரூர் வரு வாய் கோட்டாட்சியர் சௌம்யா, திருவாரூர் நகர்மன்றத் தலைவர் புவனப்பிரியா செந்தில், மண்டல மேலாளர் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) நாகராஜ் மற்றும் அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.